நாட்டில் நிலைமை சரியில்லை.. நீங்கள் பயப்பட வேண்டாம்.. ரம்ஜான் தொழுகையில் மம்தா பானர்ஜி பரபர பேச்சு
கொல்கத்தா: ‛‛இந்தியாவில் தற்போது நிலைமை சரியானதாக இல்லை. நீங்கள் பயப்பட வேண்டாம். போராட வேண்டும். சமாதானம் பற்றி பேசி ஒன்றிணைந்து போராட வேண்டும். நல்லநாள் விரைவில் வரும்'' என கொல்கத்தாவில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதத்தில் நோன்பு மேற்கொள்வர். இந்த மாதத்தில் நாள் முழுவதும் பின்னிரவில் உணவருந்தி சூரியன் மறைவு வரை நோன்பு இருப்பர்.
பிறை தெரிந்ததை தொடர்ந்து இன்று நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று ரம்ஜான் கொண்டாட்டம்
ரம்ஜானையொட்டி இன்று காலை பெருநாள் சிறப்பு தொழுமை தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்தது. மசூதிகள் மற்றும் பொது இடங்களில் முஸ்லிம் மக்கள் திரண்டு புத்தாடைகள் அணிந்து தொழுகையில் பங்கேற்றனர். பிறகு அனைவரையும் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்து கூறி கொண்டனர்.

வாழ்த்துகள்
ரம்ஜானையொட்டி அரசியல் கட்சி தலைலவர்கள், முஸ்லிம்கள் அல்லாத பிற மத தலைவர்கள், நண்பர்கள் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய , மாநில அமைச்சர்கள் ரம்ஜான் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

மம்தா பானர்ஜி பங்கேற்பு
இந்நிலையில் ரம்ஜானையொட்டி மேற்கு வங்க மாநிலத்தில் அரசு சார்பில் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்இ கொடுக்கப்பட்டு இருந்தனர். மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் ரெட் ரோடு பகுதியில் இன்று நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அவர் அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தார். அதன்பிறகு அவர் பேசியபோது கூறியதாவது:

நாட்டின் நிலைமை சரியானதாக இல்லை
‛‛இந்நிய நாட்டில் தற்போது நிலைமை சரியானதாக இல்லை. நீங்கள் பயப்பட வேண்டாம். போராட வேண்டும். சமாதானம் பற்றி பேசி ஒன்றிணைந்து போராட வேண்டும். நல்லநாள் விரைவில் வரும். மேற்கு வங்காளத்தில் அனைத்து மக்களிடையேவும் மிக உயர்ந்த ஒற்றுமை உள்ளது. நாம் கோழைகள் அல்ல. நமக்கு போராட தெரியும். நாட்டில் பிரித்தாளும் கொள்கையை மையப்படுத்தி தனிமைப்படுத்தும் நோக்கிலான அரசியல் நடக்கிறது. இது நாட்டுக்கு நல்லது இல்லை'' என முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாகவும், மத்திய அரசை விமர்சனம் செய்தும் பேசினார்.

டுவிட்டரில் வாழ்த்து
முன்னதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில், ‛ அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள். மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்க வேண்டும். நமது ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பிணைப்புகள் வலுப்பெற பிரார்த்தனை செய்யுங்கள்'' என குறிப்பிட்டு இருந்தார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications