திருட்டு வேலைக்கு மாத சம்பளம் ரூ.20,000.. உள்துறை அமைச்சரின் ஊரில் சம்பவம்! புதுசா யோசிக்கிறாங்களே!
பெங்களூர்: இப்போது டிகிரி, என்ஜினியரிங் முடித்தாலும் கூட தொடக்கத்தில் பல நிறுவனங்கள் மாதம் ரூ.15 ஆயிரம் மட்டுமே சம்பளம் வழங்குகிறது. இன்னும் பல நிறுவனங்கள் ரூ.15 ஆயிரத்தை விட குறைந்த அளவில் சம்பளம் வழங்குகிறது. ஆனால் கர்நாடகா உள்துறை அமைச்சரின் சொந்த ஊரில் திருட வரும் இளைஞருக்கு ரூ.20 ஆயிரம் மாதசம்பளமாக வழங்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.
பொதுவாக சிறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முதல் பெரிய நிறுவனங்கள், பெரிய தொழிற்சாலைகள் வரை சம்பளத்துக்கு ஆட்களை வைத்து பணி செய்கின்றனர். இந்த நடைமுறை என்பது பொதுவான ஒன்றாகும். இப்படி பணியாற்றுவோருக்கு மாதசம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் திருட்டு வேலைக்கு ஒரு கும்பல் மாதசம்பளத்துக்கு ஆட்களை சேர்த்து கைவரிசை காட்டி உள்ளது, அதுவும் உள்துறை அமைச்சரின் சொந்த ஊரிலேயே நடந்து உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இது முற்றிலும் உண்மை. இப்படியான சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
அதாவது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு உள்துறை அமைச்சராக பரமேஸ்வர் உள்ளார். இவர் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் கொரட்டகெரே பகுதியில் தொடர்ந்து போர்வெல்களில் உள்ள கேபிள் வயர்கள் அடிக்கடி திருடப்பட்டு வந்தன. குறிப்பாக விவசாய நிலத்தில் உள்ள போர்வெல்களில் கேபிள் வயர்கள் திருடப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீஸ் நிலையங்களில் பல புகார்கள் குவிந்தன. இந்த புகார்கள் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையை தொடர்ந்து வந்தனர். அப்போது கொரட்டகெரே தாலுகா வட்டகெரே என்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் போர்வெல்லில் கேபிள் வயர்கள் திருடியவர்களின் உருவம் பதிவாகி இருந்தது. மேலும் அவர்களின் காரின் நம்பரும் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து 3 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் துமகூருவை சேர்ந்த வெங்கடேஷ், பெங்களூரை சேர்ந்த ராகவேந்திரா மற்றும் வினிஷ் என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் பெங்களூரில் பதுங்கி இருந்த நிலையில் காமாட்சிபாளையம் போலீசார் கைது செய்து கொரட்டகெரே போலீசாரிடம் ஒப்படைத்தனர். 3 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ராகேவந்திரா கூறிய தகவல் அதிர்ச்சியாக இருந்தது.
அதாவது ராகேவந்திரா போலீசாரிடம், ‛‛சார் எனக்கும், திருட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு மாதசம்பளமாக வெங்கடேஷ் ரூ.20 ஆயிரம் தருகிறார். நான் வேலையில்லாமல் இருந்தேன். அப்போது எனக்கு இரவு வேலை தருவதாக வெங்கடேஷ் கூறி துமகூருக்கு காரில் அழைத்து சென்றார். அப்போது அவர் போர்வெல் வயர்களை வெட்டி எடுப்பார். நான் உதவி செய்தேன். அதன்பிறகு அந்த கேபிள் வயர்களை வினிஷிடம் விற்பனை செய்வார். எனக்கு மாத சம்பளமாக ரூ.20 ஆயிரம் மட்டும் தந்தனர்'' என்றார். இதை கேட்ட போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது 3 பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications