Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“பாரத் மாதா கி ஜெய்” சொல்ல மாட்றாங்க..மதரஸாக்களை தடை செய்ய வேண்டும்.. சர்ச்சை கிளப்பும் பாஜக எம்எல்ஏ

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு : மதரஸாக்கள் வழக்கமான பாடத்திட்டத்தை கற்பிக்க வேண்டும் அல்லது அவற்றை தடை செய்ய வேண்டும் என்று கர்நாடகாவில் போலி சான்றிதழ் சர்ச்சையில் சிக்கியுள்ள எம்எல்ஏ ரேணுகாச்சார்யா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் அரசியல் செயலாளரும் எம்எல்ஏவுமான எம்.பி.ரேணுகாச்சார்யா, தன் மகள் மற்றும் மகனுக்கு போலி ஆவணங்கள் மூலம் எஸ்.சி சான்றிதழ் பெற்றதாக புகார் எழுந்தது.

அந்த சான்றிதழ்கள் மூலம் மகனை அமெரிக்க அனுப்ப முயற்சித்ததாகவும், எஸ்சி எஸ்.டி., கார்ப்பரேஷனிடம், 42 லட்சம் ரூபாயும், வங்கியிலும் கூட, 80 லட்சம் ரூபாய் பெற்றறாத தகவல் கிடைத்துள்ளதாக மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் லட்சுமணா குற்றம் சாட்டினார்.

ஹிஜாப் சர்ச்சை

ஹிஜாப் சர்ச்சை

இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இதனை ரேணுகாச்சார்யா மறுத்துள்ளார். இந்நிலையில் தான் மதரஸாக்கள் வழக்கமான பாடத்திட்டத்தை கற்பிக்க வேண்டும் அல்லது அவற்றை தடை செய்ய வேண்டும் என்று கர்நாடகாவில் போலி சான்றிதழ் சர்ச்சையில் சிக்கியுள்ள எம்எல்ஏ ரேணுகாச்சார்யா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் ஏற்கனவே ஹிஜாப் விவகாரம் தொடர்பாக போராடங்கள் வழக்குகள் என பற்றி எரியும் நிலையில் அவரது கருத்து எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது.

புயலை கிளப்பும் எம்எல்ஏ

புயலை கிளப்பும் எம்எல்ஏ

மாநிலத்தில் நடந்து வரும் ஹிஜாப் பிரச்சினைக்கு மத்தியில் இந்த கருத்து மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றம், அதன் சமீபத்திய தீர்ப்பில், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை குறித்த அரசின் உத்தரவை உறுதி செய்தது. இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய ரேணுகாச்சார்யா," பள்ளிகளுக்குப் பதிலாக மதரஸாக்கள் ஏன் தேவை என்று காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்கிறேன். மதரஸாக்களில் என்ன பிரச்சாரம் செய்கிறார்கள்? அவர்கள் அப்பாவி குழந்தைகளை தூண்டிவிட்டு பிரச்சாரம் செய்கிறார்கள். நாளை, அவர்கள் நம் நாட்டிற்கு எதிராகச் செல்வார்கள், அவர்கள் ஒருபோதும் பாரத் மாதா கி ஜெய் என்று சொல்ல மாட்டார்கள், "என்று அவர் கூறினார்.

மதரஸாக்களுக்கு தடை

மதரஸாக்களுக்கு தடை

மேலும் "மதரஸாக்களில் இப்படிப் பாடம் நடத்துகிறார்கள், மதரஸாக்களை தடை செய்ய வேண்டும் என்று முதல்வர் மற்றும் கல்வி அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்து, கிறிஸ்தவ மாணவர்கள் படிக்கும் வேறு பள்ளிகள் எங்களிடம் இல்லையா? தேச விரோதப் பாடங்களை இங்கு நீங்கள் சொல்லிக் கொடுக்க முடியாது. மற்ற பள்ளிகளில் நாங்கள் கற்பிப்பதை தடை செய்ய வேண்டும் அல்லது பாடத்திட்டத்தை கற்பிக்க வேண்டும்" என்று ரேணுகாச்சார்யா கூறினார்.

அரசியல் களம்

அரசியல் களம்

முன்னதாக, கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறுகையில், மாநிலத்தில் மதரஸா மாணவர்கள் சமகால கல்வியைப் பெறவில்லை என்றும், மதரஸாக்கள் கோரினால், அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியை வழங்க அரசு தயாராக உள்ளது என்றும் கூறினார். ஹிஜாப் வரிசைக்கு இடையே பல தீமூட்டும் கருத்துகள் கூறப்பட்டு வருவதால் கர்நாடகாவில் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இன்றோ நாளையோ ஆர்எஸ்எஸ் ஆக மாறுவார்கள் என்று சமீபத்தில் சட்டசபையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+