Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதற்றம்.. பெங்களூரில் பந்த்தால் விழுந்த 144 தடை.. தமிழர் பகுதிகளில் போலீஸ் குவிப்பு.. பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை எதிர்த்து அறிவிக்கப்பட்ட பந்த்திற்கு பெங்களூர் போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. அதோடு பெங்களூர் நகர் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பந்த் அறிவித்த அமைப்பினர் விதிகளை மீறி பந்த்தை தொடங்கி உள்ளனர்.

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் திறக்க உத்தரவிட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அதனை செயல்படுத்த அறிவுறுத்தியது.

Cauvery Row: 144 imposed after Police denied permission for Bangalore Bandh today, but the organizors not obey

இதனால் கர்நாடகா அரசு வேறு வழியின்றி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லாத சூழலில் தமிழகத்துக்கு எப்படி தண்ணீர் திறக்கலாம்? என கர்நாடகா விவசாய அமைப்பினர் மற்றும் கன்னட அமைப்பினர் பந்த் நடத்தி வருகின்றனர்.

மண்டியாவில் பந்த் முடிந்துள்ள நிலையில் இன்று பெங்களூரில் பந்த் நடந்து வருகிறது. கர்நாடகா ஜலசம்ரக்சனா சமீதி தலைமையில் இந்த பந்த் நடத்தப்பட உள்ளது. இதற்கு 100க்கும் அதிகமான அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் பெங்களூரில் இன்று பந்த் நடத்த போலீசார் அனுமதி கொடுக்காத நிலையில் 144 தடையை மீறி அங்கு பந்த் நடத்தப்பட்டு வருகிறது.

இதுபற்றி பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறியதாவது: பெங்களூர் நகரில் பந்த் நடத்த அனுமதியில்லை. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பந்த் நடத்த அனுமதியில்லை என தெரிவித்துள்ளது. இதுபற்றி பந்த்துக்கு அழைப்பு விடுத்த அமைப்பின் நிர்வாகிகளிடம் கூறியுள்ளோம். மேலும் இதுதொடர்பான மனு உயர்நீதிமன்றத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனால் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை (இன்று) நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி 5 பேருக்கு அதிகமானவர்கள் ஒரே இடத்தில் கூடக்கூடாது. மேலும் பெங்களூர் நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதோடு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தாலோ அல்லது பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தாலோ பந்த் நடத்தும் அமைப்பின் நிர்வாகிகள் தான் பொறுப்பேற்க வேண்டும். இதுபற்றி அமைப்பின் நிர்வாகிகளுக்கு தெரிவித்து உள்ளோம். நகரில் பதற்றமான இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்'' என்றார். அதன்படி தமிழர்கள் அதிகம் வசிக்கும் காந்தி நகர், ஸ்ரீராமபுரம், சிவாஜிநகர், மாகடி ரோடு, அல்சூர், இந்திரா நகர் உள்பட பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு ரோந்து வாகனத்தில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரமாக தொடங்கி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+