அதிர்ச்சி.. எதை பற்றியும் கவலையில்லை..ஆயிரக்கணக்கானோர் திரண்டு கொண்டாடிய கோயில் விழா
பெங்களூரு: ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரு கிராமத்தில் முட்டி மோதி, நெருக்கி தள்ளி திருவிழாவை கொண்டாடி உள்ளனர்.. லாக்டவுன் சமயத்தில் கர்நாடகத்தில் ஆயிரணக்கானோர் ஒன்றிணைந்து இந்த விழாவை நடத்தியது பெரும் கலக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
எப்போது இந்த லாக்டவுன் முடியும் என்று தெரியவில்லை.. அதேசமயம் தொற்று எண்ணிக்கையும் மொத்தமாக குறையவில்லை.. பாதிப்புகள் தினந்தோறும் இருக்கத்தான் செய்கிறிது.. தற்போது 3-வது கட்ட லாக்டவுன் முடிய போகிறது.. 4-வது கட்ட லாக் இருக்கும் என்றும், அது புது வடிவத்துடன் இருக்கும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

நோய்த் தொற்று மக்களை பெரிய அளவில் அச்சுறுத்தி வரும் இந்த சூழலில் எதை பத்தியும் கவலை இல்லாமல், யாரை பற்றியும் கவலை இல்லாமல், அரசின் உத்தரவையும் மதிக்காமல், கர்நாடகாவில் உள்ள கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து திருவிழாவை கொண்டாடி உள்ளனர்.

ராமநகரா மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ளது கொலகொண்டனஹல்லி கிராமம்.. இந்தகிராம மக்கள்தான் திடீரென ஆயிரக்கணக்காக ஒன்றுகூடிவிட்டனர்.. இந்த விழாவை கொண்டாட யாரிடம் அனுமதி வாங்கினார்கள் என்று தெரியவில்லை.. ஆனால் இந்த திருவிழா சம்பந்தமான போட்டோக்கள், வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
More than thousand people gathered for a village temple fair at Kolagindahalli, Ramanagara district violating Lockdown norms .. No Masks No Social distancing ... @CMofKarnataka @DKShivakumar @police_rmn @CEORAMANAGARA pic.twitter.com/XRqDNzKKKM
— yasir mushtaq (@path2shah) May 15, 2020
பொதுமக்களின் நிலை குறித்து இவர்களுக்கு எல்லாம் கவலையே கிடையாதா என்று சமூக ஆர்வலர்கள் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.. அது மட்டுமல்ல, கொலகொண்டனஹல்லி தாசில்தார், ராமநகரா துணை கமிஷனரிடமும் புகார் அளித்தார்.
இதையடுத்து இந்த புகாரின்பேரில் திருவிழா கொண்டாட பெர்மிஷன் தந்த பஞ்சாயத்து மேம்பாட்டு அலுவலர் கல்மாத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். எனினும் இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டர்வர்கள்.. இவர்களில் யாருக்கேனும் ஒருத்தருக்கு தொற்று இருந்தாலும் அது பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.. அதனால் இந்த சம்பவம் பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications