வீடியோவுக்காக இப்படியா? பாறையில் இருந்து ஆற்றில் குதித்த பெண் டாக்டர்.. 3 வது நாளில் கிடைத்த உடல்
பெங்களூர்: கர்நாடகாவுக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பெண் டாக்டர் வீடியோவுக்காக பாறையில் இருந்து துங்கபத்திரா ஆற்றில் குதித்தார். அதன்பிறகு கரை திரும்ப முடியாமல் தவித்த பெண் டாக்டர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வரும் நிலையில் 3வது நாளில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
ஹைதரபாத்தை சேர்ந்தவர் அனன்யா ராவ் (வயது 26). இவர் எம்பிபிஎஸ் படிப்பை முடித்துள்ளார். தற்போது மருத்துவ மேல்படிப்பை படித்து வரும் அவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தான் அன்னயா ராவ் தனது நண்பர்களுடன் கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றார். வடகர்நாடகா மாவட்டங்களில் உள்ள சுற்றுலா இடங்களை அவர்கள் சுற்றிப்பார்த்தனர்.
அதன்படி கொப்பல் மாவட்டம் சனாபூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் தங்கியிருந்தனர். கடந்த 18 ம் தேதி அந்த பகுதியில் ஓடும் துங்கப்பத்ரா ஆற்றுக்கு அவர்கள் சென்றனர். தண்ணீரை பார்த்தவுடன் அனன்யா ராவ் உற்சாகப்பட்டார். அவருக்கு நீச்சல் தெரியும் என்பதால் துங்கப்பத்ரா ஆற்றில் குளிக்க முடிவு செய்தார். மேலும் அந்த இடத்தில் பாறைகள் உள்ளன. அந்த பாறையில் இருந்து ஆற்றுக்குள் குதிக்கிறேன். வீடியோ எடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து அனன்யா ராவ் பாறை முகடில் ஏறி நின்று கீழே குதித்தார். தண்ணீரில் விழுந்த அவர் நீச்சலடித்து வெளியே வர முயன்றார். ஆனால் அவரால் தண்ணீரில் இருந்து வெளியே வரமுடியவில்லை. திடீரென்று அவர் தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து அனன்யா ராவை தேட தொடங்கினர்.
ஆனால் அந்த இடம் பாறைகள் நிறைந்த பகுதியாகும். அதேபோல் துங்கபத்ரா அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு இருந்தது. இதனால் அனன்யா ராவை தேடும் பணி சவாலானது. இதையடுத்து அணையின் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. அதன்பிறகு 3 வது நாளாக நேற்று தொடர்ந்து தேடியபோது தான் அனன்யா ராவின் உடல் மீட்கப்பட்டது. அவர் தண்ணீருக்குள் மூழ்கி இறந்ததும் உறுதியானது. இதையடுத்து அந்த இடத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி பரவி வருகிறது. அதில் அனன்யா ராவின் இறுதி காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதாவது தண்ணீரில் குதிப்பதற்கு முன்பு தனது செயலை வீடியோ பதிவு செய்ய அனன்யா ராவ் கூறியுள்ளார். அதன்படி அனன்யா ராவ் பாறை மீது ஏறி நிற்கிறார். நண்பர்கள் ஒன்.. டூ.. த்ரி சொல்கின்றனர்.
இந்த வேளையில் சற்று பயந்த அனன்யா ராவ் அதன்பிறகு யோசிக்காமல் குதிக்கிறார். தண்ணீரில் விழுந்த அவர் சிறிது தூரம் நீச்சலடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் அவரால் தொடர்ந்து நீச்சலடிக்க முடியாததால் மூழ்கி இறந்துள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications