2 தோழிகளை இரவில் வீட்டில் தங்கவைத்த மாணவருக்கு ரூ.5,000 அபராதம்.. பெங்களூரில் நடந்த வினோதம்.. ரூல்ஸை பாருங்க
பெங்களூர்: பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் இரவில் 2 தோழிகளை தங்க வைத்த மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்ததை அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம் விதித்துள்ள நிலையில் கல்லூரி மாணவர் சமூக வலைதளத்தில் புலம்பி உள்ளார். இந்த பதிவு தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பெங்களூர், சென்னை, மும்பை, டெல்லி உள்பட பல முக்கிய நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இட நெருக்கடியால் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுமக்கள் தங்கி வருகின்றனர். ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புகளிலும், அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம் உள்ளது. இதற்கு என்று தனியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் தான் பெங்களூரில் இரவில் 2 தோழிகளை பிளாட்டில் தங்க வைத்ததற்காக 2 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம் ரூ.5,000 அபராதம் விதித்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்த அபராதம் குறித்த பின்னணி குறித்து அவர் தனது ரெடிட் வலைதள பக்கத்தில்கூறியுள்ளதாவது:
‛‛நான் எனது நண்பருடன் பெங்களூரில் பிபரல அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து வருகிறேன். கல்லூரியில் படித்து வருகிறேன். நான் எனது 2 தோழிகளை இரவில் வீட்டில் தங்க வைத்ததால் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. இதற்கான ரசீதை வழங்கி உள்ளனர்.
நான் வசிக்கும் அடுக்குடி குடியிருப்பில் திருமணமாகாதவர்கள் இளம்பெண்களை இரவில் தங்க வைக்ககூடாது என சொல்கின்றனர். அதனை மீறியதால் அபராதம் என்று கூறியுள்ளனர். இதுபற்றி முன்பே என்னிடம் யாரும் கூறவில்லை. ஆனால் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பமாக வசிப்பவர்களுக்கு அப்படியான கட்டுப்பாடுகள் கிடையாது. நானும், அவர்களை போலவே பராமரிப்பு கட்டணம் உள்பட அனைத்தையும் செலுத்துகிறேன்.
இந்த அபராத விஷயம் சிறியது தான். ஆனால் முதல் முறை வார்னிங் செய்திருக்கலாம். இதற்காக நான் சட்ட நடவடிக்கையையுமும் எடுக்க போவது இல்லை. இருப்பினும் இதனை மறுபரிசீலனை செய்யும் வகையில் என்னால் ஏதாவது செய்ய முடியுமா? என யோசிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.5 ஆயிரம் அபராதத்துககான ரசீதை வெளியிட்டு இருந்தார். அதில்அக்டோபர் 31 ம் தேதி இரவில் 2 பெண்களை தங்க வைத்தற்கான அபராதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் இந்த பதிவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். அதில், ஒருவர், ‛‛உங்களிடம் நிறைய பணம் மற்றும் நேரம் இருக்கிறதா? நீதிமன்றம் செல்லுங்கள். இல்லாவிட்டால் இந்த இடத்தை காலி செய்து வேறு வீட்டில் தங்குங்கள்'' என்று கூறியுள்ளார். அதேபோல் இன்னொருவர், ‛‛இந்த அபராத தொகையின் பின்னணியில் எந்த அர்த்தமும் இல்லை. மாறாக இது ஒயோ ஹோட்டல் போன்று உள்ளது'' என்று கூறினார்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications