Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடக பேருந்து விபத்து.. உடல் கருகி பலியான 20 பேர்! பிரதமர் மோடி இரங்கல்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவின் சித்ரதுர்காவில் தனியார் ஸ்லீப்பர் பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்தில் சிக்கியது. பேருந்து தீ பற்றியதில் 20 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். மட்டுமல்லாது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், "கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் நடந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

Karnataka bus Chitradurga

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து, உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 2 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்" என தெரிவித்திருக்கிறார்.

விபத்து எப்படி நடந்தது?

இன்று அதிகாலை சீ பேர்ட் நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் பேருந்து சித்ரதுர்கா அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, எதிரில் வந்த லாரி ஒன்று, தடுப்புகளை உடைத்துக்கொண்டு பேருந்தின் டீசல் டேங்க் மீது மோதியிருக்கிறது. இதனால் உடனே பேருந்து தீப்பற்றி எரிந்திருக்கிறது.

இதனால் பேருந்தில் பயணித்த 32 பேரில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மீதமுள்ளவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+