கர்நாடகா அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு உண்மையா? ட்விட்ஸ்ட் வைத்த காங்கிரஸ்! என்ன நடந்தது?
பெங்களூர்: கர்நாடகாவில் புதிதாக நேற்று 24 பேர் பதவியேற்று கொண்டனர். இதையடுத்து அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்ததாக தகவல் வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சி தற்போது ட்விஸ்ட் வைத்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 20ம் தேதி முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பதவியேற்றனர்.

இவர்கள் 2 பேருடன் சேர்ந்து 8 பேர் அமைச்சர்களாக பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். இவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. இதற்கிடையே தான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து புதிதாக அமைச்சராகும் 24 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்கள் 24 பேரும் நேற்று பெங்களூர் ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
இதன்மூலம் கர்நாடகா அமைச்சரவை முழுமையாக நிரம்பி உள்ளது. கர்நாடகா அமைச்சரவையில் முதல்வரோடு சேர்த்து மொத்தம் 34 பேர் அங்கம் வகிக்க முடியும். அதன்படி தற்போது கர்நாடகா அமைச்சரவை முழுமையாக நிரம்பி உள்ளது. அதன்படி கர்நாடகா அமைச்சர்களாக பொறுப்பேற்ற முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வரா, முனியப்பா, கே.ஜி.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜார்கோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் உள்ளிட்டவர்கள் உள்ளனர்.
அதேபால் இன்று புதிய அமைச்சர்களாக எச்கே பாட்டீல், கிருஷ்ணபைரே கவுடா, செலுவராயசாமி கே வெங்கடேஷ், எச்சி மகாதேவப்பா, ஈஷ்வர் கண்ட்ரே, கியாத்தசந்திரா என் ராஜண்ணா, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், சரணபசப்பா தர்சனாபூர், சிவானந்தா பாட்டீல், திம்மாப்பூர் ராமப்பா பாலப்பா, எஸ்எஸ் மல்லிகார்ஜூன், தங்கடகி சிவராஜ் சங்கப்பா, சரணபிரகஷ் ருத்ரப்பா பாட்டீல், மான்கால் வைத்யா, லட்சுமி ஹெப்பால்கள், ரகீம் கான், டி சுதாகர், சந்தேஷ் லாட், போஸ்ராஜூ, பிஎஸ் சுரேஷ், மது எம்சி சுதாகர், நாகேந்திரா, மது பங்காரப்பா உள்ளிட்டவர்கள் பதவியேற்றனர்.
இந்நிலையில் தான் நேற்று அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக இணையதளங்களில் பட்டியல் ஒன்று வெளியானது. சில செய்தி நிறுவனங்களும் இதனை செய்தியாக வெளியிட்டன. அதன்படி சித்தராமையா வசம் நிதித்துறை, டிகே சிவக்குமார் வசம் பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத்துறை, பெங்களூர் நகர மேம்பாட்டு துறை வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்ட்டு இருந்தது. மேலும் பரமேஸ்வரிடருக்கு உள்துறை, கேஜே ஜார்சுக்கு மின்சாரத்துறை, ராமலிங்க ரெட்டிக்கு போக்குவரத்து துறை, தினேஷ் குண்டுராவுக்கு சுகாதாரத்துறை, மது பங்காரப்பாவுக்கு பள்ளி கல்வித்துறை, கேஎச் முனியப்பாவுக்கு உணவுத்துறை, ஜமீர் அகமது கானுக்கு வீட்டு வசதி மற்றும் ஹஜ் துறை என அனைவருக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தான் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை கர்நாடா காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுபற்றி கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‛‛ சமூக வலைதளங்களிலும் சில செய்தி நிறுவனங்களிலும் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக போலியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை இதனால் இந்த யுகங்களுக்கு யாரும் செவிசாய்க்க வேண்டாம். அதோடு போலி செய்தியை நம்பவும் வேண்டாம். அரசு சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வமாக துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications