ஓலா, உபேர் ஆட்டோக்களுக்கு பெங்களூரில் தடை.. கர்நாடக போக்குவரத்துறை உத்தரவிட்டது ஏன்?
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உபேர், ஓலா, ராபிடோ வாடகை ஆட்டோக்களுக்கு தடை விதித்து அம்மாநில போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் போக்குவரத்து நெரிசலை பற்றி சொல்லவே வேண்டாம்.
அதுவும் சொந்த வாகனங்களில் சென்றால் டூவீலரை கூட பார்க் செய்ய இடம் கிடைப்பது இல்லை. கார்களை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு வாகன நெரிசல் கடுமையாக இருப்பதோடு பார்க்கிங் செய்ய கூட இடம் இருக்காது.

உபேர், ஓலா ஆட்டோக்கள்
இதனால், சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் கூட தற்போது ஓலா, உபேர் போன்ற செயலிகளை பயன்படுத்தி ஆட்டோ, காரை புக் செய்து பயணிப்பதை காண முடிகிறது. இதனால், ஆன்லைன் மூலமாக புக் செய்து பயன்படுத்தக்கூடியவர்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது. நேரடியாக ஆட்டோ, காரை புக் செய்தால் அதிக கட்டணத்தை சிலர் கேட்பதாகவும் இதனால், ஒலா, உபேரை பயன்படுத்தி புக் செய்வது எளிதாக இருப்பதாகவும் பயணிகள் கூறி வருகின்றனர்.

கட்டணத்தை உயர்த்துவதாக
அதே நேரத்தில், நேரத்திற்கு தகுந்தது போல கட்டணத்தை உயர்த்துவதாக ஒலா, உபேர் நிறுவனங்கள் மீதும் புகார்கள் இல்லாமல் இல்லை. இந்த நிலையில், ஓலா, உபேர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் ஆட்டோக்களை இணைத்து சேவை வழங்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவை பொருத்தவரை தற்போது குறைந்தபட்சமாக 2 கி.மீட்டர் பயணிக்க ரூ. 30 வாடகையாக வசூல் செய்யப்படுகிறது.

இணைத்து வாடகைக்கு ஓட்ட தடை
கூடுதலாக செல்லும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ரூ 15 வசூலிக்கப்படுகிறது. இந்த உபேர், ஒலா போன்ற செயலிகள் குறைந்தபட்சம் 100 வசூல் செய்வதாக புகார்கள் எழுந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, கர்நாடக போக்குவரத்து துறை உபேர், ஓலா, ராபிடோ போன்ற நிறுவனங்கள் ஆட்டோக்கள் இணைத்து வாடகைக்கு ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்து இருப்பதகவும் கூறப்படுகிறது.

கார்களை மட்டுமே இயக்க அனுமதி
அதில், ஓலா, உபேர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் வாடகைக்கு ஆட்டோக்களை இயக்க அனுமதி இல்லை. கார்களை மட்டுமே இயக்க அனுமதி இருக்கிறது. ஆனால், அனுமதியின்றி ஆட்டோக்களை இயக்குவது சட்டத்திற்கு எதிரானது. எனவே அடுத்த 3 தினங்களுக்குள் ஆட்டோக்களை வாடகை செயலில் இயக்குவதை நிறுத்த வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உபேர், ஓலா, ராபிடோ ஆகிய நிறுவனங்கள் வாடகைக்கு ஆட்டோக்களை இயக்கியது பற்றி விளக்கம் அளிக்கவும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

உரிய பதிலளிப்போம்
இது தொடர்பாக கருத்து தெரிவிக்க ஓலா மற்றும் உபேர் நிறுவனங்கள் மறுத்துவிட்டன. உபேர் நிறுவனங்கள் கடந்த சில வாரங்களாக ஆட்டோக்களும் தங்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக தொலைக்காட்சி விளம்பரங்களை வெளியிட்டு வந்த நிலையில் கர்நாடக அரசின் போக்குவரத்து துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், ராபிடோ நிறுவனம் இது குறித்து கூறுகையில், 'பெங்களூருவில் நாங்கள் சட்ட விரோதமாக சேவையில் ஈடுபடவில்லை. அரசின் நோட்டீசுக்கு உரிய பதிலளிப்போம்' என்று தெரிவித்துள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications