தூக்கி ஆம்புலன்ஸ்ல ஏத்துங்க.. பெங்களூரில் மாஸ்க் போடாமல் வெளிய போனா இதுதான் கதி.. அட கடவுளே!
பெங்களூர்: பெங்களூரில் மாஸ்க் அணியாமல் சாலையில் சுற்றும் நபர்களை மாநகராட்சியை சேர்ந்த மார்ஷல் அதிகாரிகள் அபராதம் விதித்தது போக தற்போது புதிய விதமான தண்டனையும் கொடுக்க தொடங்கி உள்ளனர்.
Recommended Video
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக அமலில் உள்ளது. இதை கண்காணிப்பதற்காக மார்ஷல் அதிகாரிகளை மாநகராட்சி பணி அமர்த்தி உள்ளது.
ராணுவ உடையை போலவே யூனிபார்ம் அணிந்து இருக்கும் இந்த அதிகாரிகள் சாலையில் மாஸ்க் அணியாமல் செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தொடக்கத்தில் இவர்கள் மாஸ்க் அணியாமல் சென்றவர்களிடம் அபராதம் மட்டுமே விதித்தனர்.

என்ன அபராதம்
தொடக்கத்தில் மாஸ்க் அணியாமல் செல்பவர்களிடம் கூகுள் பே, பேடிஎம் மூலம் சாலையிலேயே இவர்கள் அபராதங்களை விதித்தனர். ஆனால் தற்போது பெங்களூரில் மாஸ்க் அணியாமல் சாலையில் சுற்றும் நபர்களை மாநகராட்சியை சேர்ந்த மார்ஷல் அதிகாரிகள் அபராதம் விதித்தது போக தற்போது அவர்களை கட்டாய கொரோனா சோதனைக்கும் அழைத்து செல்கிறார்கள்.

கொரோனா டெஸ்ட்
சாலையில் மாஸ்க் அணியாமல் வருபவர்களை கட்டாயப்படுத்தி ஆம்புலன்சில் அழைத்து செல்கிறார்கள்.அருகே இருக்கும் அரசு கொரோனா மருத்துவமனைகளில் வைத்து கொரோனா சோதனை செய்கிறார்கள். ஆன்டிஜென் சோதனை எனப்படும் ரேபிட் சோதனைகளை செய்கிறார்கள். பெங்களூரின் முக்கிய பகுதிகள் பலவற்றில் இப்படி இளைஞர்கள் பலர் கொரோனா சோதனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

ஆம்புலன்ஸ் சோதனை
ஆம்புலன்சில் வர மாட்டேன் என்று சொல்பவர்களை கூட கட்டாயப்படுத்தி இவர்கள் அழைத்து சென்று இருக்கிறார்கள். பெங்களூரில் மார்ஷல் அதிகாரிகள் இப்படி வரம்பு மீறி செயல்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பெங்களூர் மாநகராட்சி சிறப்பு கமிஷ்னர் ரன்தீப் பதில் அளித்துள்ளார். அதில், மார்ஷல் அதிகாரிகளுக்கு கொரோனா சோதனை செய்யும் அதிகாரத்தை நாங்கள் கொடுக்கவில்லை. வாய்மொழியாகவோ, எழுத்து பூர்வமாகவோ எந்த உத்தரவும் செல்லவில்லை.

அதிகாரம் இல்லை
அவர்களுக்கு அபராதம் விதிக்க மட்டுமே அனுமதி அளித்து இருக்கிறோம். மார்ஷல் வீரர்கள் மக்களை கொரோனா சோதனைக்கு அழைத்து செல்வதாக வரும் செய்திகளை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் அப்படி எந்த ஆர்டரும் போடவில்லை. இருப்பினும் மக்கள் வெளியே செல்லும் போது கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும், என்று ரன்தீப் கூறியுள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications