Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹெடெக் மாடல் ‘சப்ளை’.. சொகுசு பங்களா..தலைமறைவு! பாஜக அமைச்சர்களுடன் தொடர்பு? யார் இந்த சான்ட்ரோ ரவி?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் பாஜக அமைச்சர்களுடனும் கட்டுக்கட்டாக பணத்துடன் சான்ட்ரோ ரவி என்ற நபர் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் பாலியல் தொழில் செய்து வந்ததாக புகார் எழுந்த நிலையில் 11 நாட்கள் தலைமறைவுக்குப் பிறகு தற்போது குஜராத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த மஞ்சுநாத் என்ற சான்ட்ரோ ரவி தன்னை தொழிலதிபர் எனக் கூறி வலம் வந்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது இரண்டாவது மனைவி தன்னை கணவர் சான்ட்ரோ ரவி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் கர்நாடகாவில் உள்ள பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் உயர் அதிகாரிகளுக்கு இளம் பெண்களை அவர் பாலியல் தொழிலுக்காக அனுப்பி வைத்ததாகவும் கூறி பரப்பரப்பை பற்ற வைத்தார்.

சாண்ட்ரோ ரவி

சாண்ட்ரோ ரவி

இதை அடுத்து கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு எழுந்த நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக அமைச்சர்களுடனும் கட்டு கட்டான பணத்துடனும் சான்ட்ரோ ரவி இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. இதனால் பல்வேறு அரசியல் தலைவர்களும் நெருக்கடிக்கு உள்ளானார். இந்த நிலையில் ஆளும் கட்சிக்கும் நெருக்கடி பெரிய அளவில் அதிகரித்தது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டதோடு ஆறு தனிப்படைகளும் அமைக்கப்பட்டது.

 பாலியல் தொழில்

பாலியல் தொழில்

அதுமட்டுமல்லாமல் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் - அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே சான்ட்ரோ ரவி குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல மலைக்க வைக்கும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகின. பல இளம் பெண்களுடன் பழகி அவர்களை திருமணம் செய்யும் அவர் அவர்களை அடுத்ததாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்தது தெரிய வந்தது. இதே போல பல பெண்களை அவர் இவ்வாறு கொடூர படுகுழியில் தள்ளியுள்ளதும் இதுவரை நான்கு பெண்களை திருமணம் செய்ததும் தெரியவந்தது.

 அமைச்சர்களுடன் தொடர்பு?

அமைச்சர்களுடன் தொடர்பு?

அவரது மூன்று மனைவிகள் அவரை விட்டு பிரிந்த நிலையில் மூன்றாவது மனைவி அவருடன் வசித்து வருகிறார். மேலும் சான்ட்ரோ ரவியின் பாலியல் தொழிலையும் அவர்தான் கவனித்து வந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து ஏற்கனவே பல பெண்கள் புகார் அளித்த போதும் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சான்ட்ரோ ரவி தப்பித்து வந்ததோடு பல அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இளம் பெண்களை பாலியல் தொழிலுக்காக அனுப்பி வைத்துள்ளார்.

தலைமறைவு

தலைமறைவு

இதற்காகவே இவர் பெரிய அளவில் பங்களாக்களை வாங்கி வைத்திருந்ததும் கர்ப்பமான பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்தது. தனது அரசியல் பழக்கங்களை வைத்து அதிகாரிகளுக்கு இடமாற்றம் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்தும் லட்சக்கணக்கில் வருமானம் பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் அவரது இரண்டாவது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை அடுத்து அவரை தேடும் பணி தீவிர படுத்தப்பட்ட நிலையில் 11 நாட்களாக சான்றோர் ரவி தலைமறைவாக இருந்தார்.

 குஜராத்தில் கைது

குஜராத்தில் கைது

அவரது சொந்த செல்போனை பயன்படுத்தாததால் அவரை கைது செய்வதில் சிக்கல் நீடித்தது. இருந்தும் அவரது ஓட்டுநரை முதலில் கைது செய்த போலீசார் அவர் தொடர்பு கொண்ட எண்களை வைத்து சான்ட்ரோ ரவி குஜராத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதை அடுத்து கர்நாடகாவில் இருந்து மைசூரு ராம் நகர் பெங்களூர் உடுப்பி வழியாக குஜராத்துக்கு தப்பி சென்றது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் சான்றோ ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+