பெங்களூர் வாடகை வீட்டில் காதல் ஜோடி.. தீபாவளி நாளில் என்ன நடந்தது? போலீஸ் சொல்வது என்ன

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரு அருகே ஆனேக்கல் பகுதியில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக ராகேஷ் பாத்ரா என்பவர் வேலை செய்து வந்தார். இவரது காதலி சீமா நாயக்.. இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தனர். இந்த காதல் ஜோடி ஜிகினி அருகே கல்லுபாலு கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து 2 பேரும் தங்கினார்கள். இருவரும் வீட்டில் இருந்த கோலம் அண்டை வீட்டாரை ஆடிப்போக வைத்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோருக்கு, பொதுவாக சமூக பாதுகாப்பு, சட்ட பாதுகாப்பு இல்லை.. ஆனால் சேர்ந்து வாழ்வது ஆங்காங்கே நடக்கிறது. பெங்களூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம். பெங்களூரு அருகே ஆனேக்கல்லில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த காதல் ஜோடிக்கு நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

what happened to the love couple who lived together without getting married in Bangalore

பெங்களூரு அருகே ஆனேக்கல் பகுதியில் உள்ள ஜிகினி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 23 வயதாகும் ராகேஷ் பாத்ரா என்பவர் வசித்து வந்தார். இவரது சொந்த ஊர் ஒடிசா மாநிலம் ஆகும். இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக ராகேஷ் பாத்ரா வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் ஒடிசாவை சேர்ந்த சீமா நாயக் (21) என்பவர் கூலி தொழிலாளியாக வேலை செய்தார். 2 பேரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்ததால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் காதலாக மாறியது. பின்னர் ஜிகினி அருகே கல்லுபாலு கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து 2 பேரும் தங்கியிருக்கிறார்கள்.

ராகேஷ் மற்றும் சீமா திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் மத்தியில் சண்டை வந்துள்ளது. இதற்கிடையில், நேற்று முன் தினத்தில் இருந்து ராகேஷ் வசித்து வந்த வாடகை வீடு திறக்கப்படாமல் இருந்திருக்கிறது.

நேற்று காலையில் ராகேஷ் செல்போனுக்கு, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அழைத்தபோது, அவர் எடுத்து பேசவில்லை என கூறப்படுகிறது இதனால் சந்தேகம் அடைந்து அவர்கள் ஜன்னல் கதவை திறந்து பார்க்கையில் சீமா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தும். ராகேசும் பிணமாக கிடந்தார். இதுபற்றி உடனடியாக ஜிகினி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்கள். போலீசார் விரைந்து வந்து ராகேஷ், சீமா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது கடந்த 19-ந் தேதி நள்ளிரவு சீமா தூங்கிய பின்பு ராகேஷ் உயிரை விட்டுள்ளார். அடுத்த நாள் அதிகாலையில் எழுந்த சீமா, காதலன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, ராகேஷ் தூக்கில் தொங்கிய துணியை வெட்டி உடலை கீழே இறக்கி இருக்கிறார். காதலன் உயிரிழந்திருப்பது தெரிந்ததும், சீமாவும் உயிரை மாய்த்தது தெரியவந்துள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் அந்த வீட்டுக்கு 2 பேரும் வாடகைக்கு வந்துள்ளனர். ராகேசுக்கும், சீமாவுக்கும் இடையே அடிக்கடி பணப்பிரச்சனையால் தகராறு ஏற்பட்டு வந்ததாம். கடந்த 19-ந் தேதி இரவும் ராகேஷ் மது குடிக்க பணம் கேட்டதாகவும், இந்த விவகாரத்தில் 2 பேருக்கும் சண்டை ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஜிகினி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+