பான் கார்டு விண்ணப்பத்தில் அம்மா பெயரை இணைக்கலாம் - டிச.5 முதல் புதிய முறை
பான் கார்டு விண்ணப்பத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர் விரும்பினால், தாய் பெயரை பான் கார்டில் குறிப்பிடலாம்.
டெல்லி: பான் கார்டு விண்ணப்பத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. பான் எண் விண்ணப்பிக்கும் நபரின் தந்தையை விட்டு தாய் பிரிந்து சென்று விட்டால், தந்தை பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமல்ல என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய குடிமக்கள் அனைவருமே பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். பான்கார்டு பெறுவதற்கு வயது வரம்பு தேவையில்லை. பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். வெளிநாடு வாழ் இந்தியர்களும் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் முகவரிச் சான்று, இருப்பிடச்சான்று, அடையாளச் சான்று விண்ணப்பத்துடன் 107 ரூபாய் செலுத்த வேண்டும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்.எஸ்.டி.எல் அமைப்பு பான் எண் வழங்கும் சேவையை செய்து வருகிறது. வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய, பங்குகளை வாங்கி விற்பதற்கான டீமேட் அக்கவுண்ட் தொடங்க பான்கார்ட் அவசியம். வங்கியில் 50000 ரூபாய் டெபாசிட் செய்ய, பணம் எடுக்கவும் பான் கார்ட் அவசியம்.
இதன்மூலம் கடன், முதலீடு, பண மதிப்பு கொண்ட வாங்கி விற்கும் நடவடிக்கைகள், வங்கி பணபரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்தும் கண்காணிக்கப்படும்.
ஒருமுறை பான் எண் வழங்கப்பட்டால், மீண்டும் அதை மாற்ற இயலாது. இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும், பான் எண் மாறாது. அதையே பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சூழலில் பான் விண்ணப்பத்தில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, விண்ணப்பிக்கும் நபரின் தந்தையை விட்டு தாய் பிரிந்து சென்று விட்டால், தந்தை பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமல்ல என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வருமான வரி விதிகளிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒருவேளை விண்ணப்பிக்கும் நபர் விரும்பினால், தாய் பெயரைக் குறிப்பிடலாம். இந்த விதிமுறைகள் வரும் டிசம்பர் 5ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications