நான் கடனாளி அல்ல... அப்பாவி - சொல்வது விஜய் மல்லையா!
லண்டன்: வங்கிகளிடமிருந்து கடன் வாங்கிவிட்டு தப்பிச்சென்றதாக தன்மீது குற்றஞ்சாட்டப்படுவது முறையல்ல என்றும், இந்த நிமிடம் வரைக்கும் கிங் பிஃஷர் நிறுவனம் வங்கிகளுக்கு தரவேண்டிய பணம் எவ்வளவு என்பதை நீதிமன்றம் உறுதிசெய்யவில்லை என்றும் விஜய் மல்லையா தனது டுவிட்டர் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான, தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து ரூ.9,000 கோடிக்கு மேல் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை. வங்கிகள் நெருக்கடி கொடுத்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டின் மார்ச் மாதம் இங்கிலாந்து சென்றுவிட்டர். அவரை எப்படியாவது இந்தியாவிற்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அவரோ பலருக்கும் டிமிக்கி கொடுத்து வருகிறார். ஆனால் தொடர்ச்சியாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டு ஊடகங்களுக்கு தீனி போட்டு வருகிறார்.

விஜய் மல்லையா
விஜய் மல்லையா மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. சார்பில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவரை இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
|
நான் குற்றவாளியா?
இதுகுறித்து விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில், நான் எந்த தவறும் செய்யவில்லை. மீடியாக்கள்தான் என்னை குற்றவாளி ஆக்குகின்றன. நான் எந்த வங்கியிலும் கடன் வாங்கிவிட்டு தப்பிச் செல்லவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
|
உறுதியாகவில்லை
இந்த நிமிடம் வரைக்கும் கிங் பிஃஷர் நிறுவனம் வங்கிகளுக்கு தரவேண்டிய பணம் எவ்வளவு என்பதை நீதிமன்றம் உறுதிசெய்யவில்லை என்றும் விஜய் மல்லையா பதிவிட்டுள்ளார். மல்லையாவின் இந்த பதிவுக்கு ட்விட்டரில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மீண்டும் ஒரு உதவி
நான் பணத்தை வாங்கிக் கொண்டு எங்கேயும் ஓடி விடவில்லை. கிங்பிஷர் ஏர்லைன்ஸ்சில் முதலீடு செய்துள்ளேன். பெட்ரோல் விலை உயர்வு கிங்பிஷரை சிரமப்படுத்தி வருகிறது. மத்திய அரசு பாலிசியை மாற்றி விலையை குறைக்க வேண்டும். இந்த சகாயத்தை மட்டும் எனக்கு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். பலே ஆள்தான் மல்லையா.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications