அரசு ஒப்பந்தங்களில் 1% கமிஷன் லஞ்சம்- பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் டிஸ்மிஸ்- அதிரடி கைது!
சண்டிகர்: பஞ்சாப் மாநில அரசு ஒப்பந்தங்களில் 1% கமிஷன் லஞ்சம் கேட்டதாக ஊழல் புகாருக்குள்ளான பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்சிங்லா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அத்துடன் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் விஜய்சிங்லா கைதும் செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. டெல்லியைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய 2-வது மாநிலம் பஞ்சாப். இம்மாநிலத்தின் முதல்வராக பகவந்த் மான் பொறுப்பேற்றார். அப்போதே ஊழல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார் முதல்வர் பகவந்த் மான்.

இந்த நிலையில் பகவந்த் மான் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சரான விஜய்சிங்லா மீது ஊழல் புகார்கள் ரெக்கை கட்டி பறந்தன. குறிப்பாக அரசு ஒப்பந்தங்களில் 1% கமிஷன் லஞ்சம் கேட்கிறார் விஜய்சிங்லா என்கிற புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முதல்வர் பகவந்த் மானும் விசாரணை நடத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய்சிங்லாவை இன்று அமைச்சரவையில் இருந்து நீக்கினார் முதல்வர் பகவந்த் மான். அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விஜய்சிங்லா அடுத்த சில மணிநேரங்களிலேயே அதிரடியாக கைதும் செய்யப்பட்டார். இது தொடர்பாக கூறிய முதல்வர் பகவந்த் மான், ஊழல், லஞ்சப் புகார்களை எங்களால் சகித்து கொள்ள முடியாது; கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications