விதி மீறிட்டீங்க.. புகையிலை மென்றதால் கடுப்பான நிஹாங் சீக்கியர்கள்.. துடிக்க துடிக்க இளைஞர் படுகொலை
சண்டிகர்: புகையிலையை மென்றுகொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த நிஹாங் சீக்கியர்கள் இளைஞர் ஒருவரை வெட்டி கொன்றுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக நிஹாங் சீக்கியர்கள் கைகளில் ஆயுதங்களை கொண்டிருப்பார்கள்.
இந்நிலையில் இந்த ஆயுதம் கொண்டு இந்த கொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தாக்குதல்
அமிர்தசரஸில் உள்ள கோல்டன் அமிர்தசரஸ் அருகே உள்ள தெருவில் இந்த படுகொலை நிகழ்ந்துள்ளது. பேருந்தில் இருந்து இளைஞர் ஒருவர் இறங்கி வந்துள்ளார். அவருடன் இரண்டு நிஹாங் சீக்கியர்கள் வந்துள்ளனர். அப்போது, நிஹாங் சீக்கியர்களுக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இளைஞரை நிஹாங் சீக்கியர்கள் தாக்க தொடங்கியுள்ளனர்.

சடலம் மீட்பு
இருவருடன் மூன்றாவதாக ஒரு நிஹாங் சீக்கியரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். முடிவில் அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை குறித்து யாரும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக இளைஞரின் உடல் இரவு முழுவதும் கால்வாயின் அருகிலேயே கிடந்துள்ளது. விடிந்த பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரே பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

புகையிலைதான் காரணம்?
இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்ததில், இளைஞன் போதையில் இருந்ததாகவும், புகையிலையை மென்று கொண்டிருந்ததால் கோபமடைந்த நிஹாங் சீக்கியர்கள் இளைஞனை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றன. நிஹாங் சீக்கியர்கள் ஒரு காலத்தில் போர் வீரர்களாக பயிற்சி பெற்று போர்க்களத்தில் பணியாற்றியவர்களாக இருந்துள்ளனர்.

வரலாறு
ஒவ்வொரு நிஹாங் சீக்கியரிடமும் நிச்சயம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாள் இருக்கும். மேலும் சில ஆயுதங்களையும் கூட அவர்கள் கொண்டிருக்கலாம். எப்போதும் நீல நிற உடையில் அவர்கள் இருப்பார்கள். இதுவே அவர்களை தனித்துவமாக அடையாளப்படுத்தும். இவர்கள் 10வது சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங்கின் காலத்தில் உருவானதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் ஒருவர் கொடுரமாக கொல்லப்பட்டத்திலிருந்து நிஹாங் சீக்கியர்கள் குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications