சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விதி மீறிட்டீங்க.. புகையிலை மென்றதால் கடுப்பான நிஹாங் சீக்கியர்கள்.. துடிக்க துடிக்க இளைஞர் படுகொலை

Google Oneindia Tamil News

சண்டிகர்: புகையிலையை மென்றுகொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த நிஹாங் சீக்கியர்கள் இளைஞர் ஒருவரை வெட்டி கொன்றுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக நிஹாங் சீக்கியர்கள் கைகளில் ஆயுதங்களை கொண்டிருப்பார்கள்.

இந்நிலையில் இந்த ஆயுதம் கொண்டு இந்த கொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத யானை! நீண்ட தந்தம் கண்டுபிடிப்பு.. ப்பா இவ்வளவு பெரிதா? 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத யானை! நீண்ட தந்தம் கண்டுபிடிப்பு.. ப்பா இவ்வளவு பெரிதா?

தாக்குதல்

தாக்குதல்

அமிர்தசரஸில் உள்ள கோல்டன் அமிர்தசரஸ் அருகே உள்ள தெருவில் இந்த படுகொலை நிகழ்ந்துள்ளது. பேருந்தில் இருந்து இளைஞர் ஒருவர் இறங்கி வந்துள்ளார். அவருடன் இரண்டு நிஹாங் சீக்கியர்கள் வந்துள்ளனர். அப்போது, நிஹாங் சீக்கியர்களுக்கும் அந்த இளைஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இளைஞரை நிஹாங் சீக்கியர்கள் தாக்க தொடங்கியுள்ளனர்.

சடலம் மீட்பு

சடலம் மீட்பு

இருவருடன் மூன்றாவதாக ஒரு நிஹாங் சீக்கியரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். முடிவில் அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை குறித்து யாரும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக இளைஞரின் உடல் இரவு முழுவதும் கால்வாயின் அருகிலேயே கிடந்துள்ளது. விடிந்த பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரே பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 புகையிலைதான் காரணம்?

புகையிலைதான் காரணம்?

இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்ததில், இளைஞன் போதையில் இருந்ததாகவும், புகையிலையை மென்று கொண்டிருந்ததால் கோபமடைந்த நிஹாங் சீக்கியர்கள் இளைஞனை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றன. நிஹாங் சீக்கியர்கள் ஒரு காலத்தில் போர் வீரர்களாக பயிற்சி பெற்று போர்க்களத்தில் பணியாற்றியவர்களாக இருந்துள்ளனர்.

வரலாறு

வரலாறு

ஒவ்வொரு நிஹாங் சீக்கியரிடமும் நிச்சயம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வாள் இருக்கும். மேலும் சில ஆயுதங்களையும் கூட அவர்கள் கொண்டிருக்கலாம். எப்போதும் நீல நிற உடையில் அவர்கள் இருப்பார்கள். இதுவே அவர்களை தனித்துவமாக அடையாளப்படுத்தும். இவர்கள் 10வது சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங்கின் காலத்தில் உருவானதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் ஒருவர் கொடுரமாக கொல்லப்பட்டத்திலிருந்து நிஹாங் சீக்கியர்கள் குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது.

English summary
Enraged Nihang Sikhs hacked a youth to death because he was chewing tobacco. The incident took place near Amritsar in Punjab. Nihang Sikhs usually carry weapons in their hands. In this case, it has been revealed that this murder was done with this weapon. The related CCTV footage has been released.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X