பஞ்சாப்: காங்கிரஸ் படுதோல்விக்கு "இப்படியும்" 2 காரணம்? புட்டு புட்டு வைக்கும் விவசாயி கோல்டன் சிங்!
சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. பஞ்சாப் மாநிலத்தில் மிகப்பெரிய தோல்வியை காங்கிரஸ் கட்சி சந்திக்கிறது.
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 117 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடந்தது. விவசாயிகளின் போராட்டத்துக்குப் பிறகு நடக்கும் பஞ்சாப் தேர்தலை இந்தியா உற்றுநோக்கி வருகிறது.
பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தேர்தல் நடந்தது. இந்த ஐந்து மாநிலங்களுக்கும் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.

பஞ்சாப்
பஞ்சாப் மாநிலத்தைப் பொருத்தவரை, விவசாயிகள் போராட்டம் மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டது. டெல்லியில் விவசாயிகள் போராடும் போது, பாஜக எந்த உதவியும் செய்யவில்லை, அதோடு, விவசாயிகள் இறந்தபோது அதற்கு பிரதமர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்பதால் பஞ்சாப் விவசாயிகள் பாஜக மீது அதிருப்தியில் இருந்தனர்.

காங்கிரஸ்
பாஜக மீது மக்கள் அதிருப்தியில் இருந்ததால், காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெறும் என கணித்தது. ஆனாலும், 117 இடங்களில் தற்போது வெறும் 18 இடங்களில் மட்டும் தான் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதனால் முதன்முறையாக ஆம் ஆத்மி பஞ்சாபில் ஆட்சியை அமைக்கிறது.

கோல்டன் சிங்
காங்கிரஸ் கட்சி பஞ்சாபில் தோற்றது குறித்து, பஞ்சாப் விவசாயி கோல்டன் சிங் கூறுகையில், ''காங்கிரஸ் கட்சியின் அமரிந்தர் சிங், முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும், சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக வந்தார். அவர் வந்த பிறகு எந்த முன்னேற்றமும் வரவில்லை. பெரிய அளவில் வளர்ச்சிகள் இல்லை. விவசாயிகள் போராட்டம் நடக்கும்போது, பெரிய உறுதுணையைக் கொடுக்கவில்லை.
Recommended Video

தலித் முதல்வர்
சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டதும், தலித் முதல்வர் என்று கொண்டாடப்பட்டார். அவருக்கு பெரிய விளம்பரம் கிடைத்தது. ஆனால் அதுவே காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக அமைந்தது. சீக்கியர்களில் தலித் இருக்கிறார்கள் என்பதே பலருக்கும் தெரியாது. இந்நிலையில் தான், தலித் முதல்வர் என்று விளம்பரப்படுத்தியதை சீக்கியர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. அதோடு மக்கள் ஏதோ ஒரு மாற்றத்துக்கு தயாராக இருந்திருக்கிறார்கள்'' என்றார். அதாவது விவசாயிகள் போராட்டத்திற்கு சரியாக ஆதரவு தராதது மற்றும், தலித் சீக்கியர் என்ற விளம்பரம் ஆகியவை தோல்விக்கு காரணம் என்கிறார் கோல்டன் சிங்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications