பஞ்சாப்: காங்கிரஸ் படுதோல்விக்கு "இப்படியும்" 2 காரணம்? புட்டு புட்டு வைக்கும் விவசாயி கோல்டன் சிங்!
சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. பஞ்சாப் மாநிலத்தில் மிகப்பெரிய தோல்வியை காங்கிரஸ் கட்சி சந்திக்கிறது.
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 117 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடந்தது. விவசாயிகளின் போராட்டத்துக்குப் பிறகு நடக்கும் பஞ்சாப் தேர்தலை இந்தியா உற்றுநோக்கி வருகிறது.
பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தேர்தல் நடந்தது. இந்த ஐந்து மாநிலங்களுக்கும் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.

பஞ்சாப்
பஞ்சாப் மாநிலத்தைப் பொருத்தவரை, விவசாயிகள் போராட்டம் மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டது. டெல்லியில் விவசாயிகள் போராடும் போது, பாஜக எந்த உதவியும் செய்யவில்லை, அதோடு, விவசாயிகள் இறந்தபோது அதற்கு பிரதமர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்பதால் பஞ்சாப் விவசாயிகள் பாஜக மீது அதிருப்தியில் இருந்தனர்.

காங்கிரஸ்
பாஜக மீது மக்கள் அதிருப்தியில் இருந்ததால், காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெறும் என கணித்தது. ஆனாலும், 117 இடங்களில் தற்போது வெறும் 18 இடங்களில் மட்டும் தான் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 90 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதனால் முதன்முறையாக ஆம் ஆத்மி பஞ்சாபில் ஆட்சியை அமைக்கிறது.

கோல்டன் சிங்
காங்கிரஸ் கட்சி பஞ்சாபில் தோற்றது குறித்து, பஞ்சாப் விவசாயி கோல்டன் சிங் கூறுகையில், ''காங்கிரஸ் கட்சியின் அமரிந்தர் சிங், முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும், சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக வந்தார். அவர் வந்த பிறகு எந்த முன்னேற்றமும் வரவில்லை. பெரிய அளவில் வளர்ச்சிகள் இல்லை. விவசாயிகள் போராட்டம் நடக்கும்போது, பெரிய உறுதுணையைக் கொடுக்கவில்லை.
Recommended Video

தலித் முதல்வர்
சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டதும், தலித் முதல்வர் என்று கொண்டாடப்பட்டார். அவருக்கு பெரிய விளம்பரம் கிடைத்தது. ஆனால் அதுவே காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக அமைந்தது. சீக்கியர்களில் தலித் இருக்கிறார்கள் என்பதே பலருக்கும் தெரியாது. இந்நிலையில் தான், தலித் முதல்வர் என்று விளம்பரப்படுத்தியதை சீக்கியர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. அதோடு மக்கள் ஏதோ ஒரு மாற்றத்துக்கு தயாராக இருந்திருக்கிறார்கள்'' என்றார். அதாவது விவசாயிகள் போராட்டத்திற்கு சரியாக ஆதரவு தராதது மற்றும், தலித் சீக்கியர் என்ற விளம்பரம் ஆகியவை தோல்விக்கு காரணம் என்கிறார் கோல்டன் சிங்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications