அதிர்ச்சியில் மத்திய அரசு! மீண்டும் போராட்டத்துக்கு தயாராகும் பஞ்சாப் விவசாயிகள்... ஏன்?
சண்டிகர் : பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக அறிவித்த மத்திய அரசை கண்டித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் பஞ்சாப் மாநில விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக இடைவிடாத போராட்டங்களை நடத்தி தலைநகர் டெல்லியையே முடக்கிப்போட்ட விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவான சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு புதிய போராட்டத்தை கையில் எடுக்க உள்ளது.
அண்மையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் பஞ்சாபில் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து 10 முதல் 18 சதவீதம் வரை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் விவசாயிகள் கொந்தளிப்பு
பெட்ரோல், டீசல் விலையேற்றம் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு பஞ்சாப் மாநில விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்தை அம்மாநில விவசாயிகள் கையில் எடுக்க உள்ளனர்.

அடுத்தக்கட்ட போராட்டம் நடத்த திட்டம்
இதுகுறித்து தெரிவித்துள்ள சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பின் மூத்த தலைவர் ஹரிந்ர் சிங் லகோவால், "விரைவில் பல்வேறு சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது என்ற தகவல் எங்களுக்கு கிடைத்து இருக்கிறது. எனவே சம்யுக்தா கிஷான் மோர்ச்சாவில் இருக்கும் விவசாய சங்கங்கள் ஒன்றுகூடி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அடுத்தக்கட்ட போராட்டங்களை தொடங்குவது குறித்து முடிவெடுக்க இருக்கிறோம்.

விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டம்
பொதுமக்கள் ஏற்கனவே விலைவாசி உயர்வு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இத்தகைய சூழலில் சங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதை எங்களால் சகித்துக்கொள்ள முடியாது." என்றார்.
"பெட்ரோல், டீசல் விலையும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. சுங்கக் கட்டண உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் என்பதை நாம் மறக்கக் கூடாது. இதுபற்றி ஆலோசிக்க விரைவில் ஒரு கூட்டம் நடத்த இருக்கிறோம்." எனக் கூறுகிறார் சம்யுக்தா கிஷான் மோர்ச்சாவின் மற்றொரு தலைவரான தர்ஷன் பால்.

மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை
இதுகுறித்து கிர்தி விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் தேவிந்தர் பூனியா தெரிவிக்கையில், "வேளாண் சட்டங்களை கண்டித்து சுங்கச்சாவடிகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை பழிவாங்குவதற்காகவே பஞ்சாப் மற்றும் அரியானாவில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து நாங்கள் நிச்சயம் போராடுவோம்." என்றார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications