செங்கல்பட்டில் 'பகீர்'.. 11 கொரோனா நோயாளிகள் மூச்சுத் திணறி பலி - ஆக்சிஜன் தட்டுப்பாடா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடே உயிரிழப்புக்கு காரணம் என்று புகார் எழுந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை கடுமையாக வீசி வருகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் மக்கள் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பு தீவிரம் அடைபவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு, ரெமிடிசிவிர் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது.

சரியான நேரத்தில் ஆக்சிஜன் உதவி கிடைக்காமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலரும் இறந்து வருகின்றனர். சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் இந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு மரணத்தில் அடக்கம்.

 செங்கல்பட்டு அரசு மருத்துவமனை

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை

இந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 5 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தினம் ஆயிரத்து 500க்கும் மேற்போட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 அதிகரித்த எண்ணிக்கை

அதிகரித்த எண்ணிக்கை

இந்நிலையில் நேற்று இரவு பத்து மணி முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனடியாக, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டது. அதற்குள் மேலும் அடுத்தடுத்து சிலர் இறந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.

 ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு

இதையடுத்து, சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்பின் அவர் கூறுகையில், 'மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பில் இருந்தது. இருப்பினும் எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது. 11 பேர் உயிரிழப்பு குறித்து, உரிய விசாரணை நடத்தப்படும்' என்றார்.

 மருந்துக்கும் தட்டுப்பாடு

மருந்துக்கும் தட்டுப்பாடு

நாட்டின் தேசிய தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல மரணங்களை சந்தித்துக் கொண்டிருக்க, தமிழகம் அந்தளவுக்கு மோசமில்லை என்ற நிலையில் இருந்தது. எனினும், கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆக்சிஜனுக்கும், மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது. இந்த சூழலில், செங்கல்பட்டில் அதுவும் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 11 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+