நல்லவேளை.. கடைசி நேரத்தில் கண்டுபிடிப்பு.. செஸ் ஒலிம்பியாட் கலைஞர்கள் 4 பேருக்கு கொரோனா
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனால் பாதிக்கப்பட்ட 4 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
44 வது ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு அரசு தரப்பில் பிரதமர் மோடியின் வருகை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாலை சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டி தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த போட்டிக்கு வரும் சிறப்பு விருந்தினர்கள், விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமான சிறப்பான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து இருக்கிறது.
செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் பங்கேற்றுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் தமிழகத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் விதமாக கண்கவர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலை நிகழ்ச்சி குழுவில் பங்கேற்க உள்ள இருந்த நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 900 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.












Click it and Unblock the Notifications