76வது சுதந்திர தினம்..ஜொலித்த ரிப்பன் மாளிகை..தேசியக் கொடி ஏற்றிய மேயர் பிரியா
சென்னை: 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று சென்னை மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றினார். இதனைத்தொடர்ந்து முறையாக வரி செலுத்திய 6 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார் மேயர் பிரியா.
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் 2வது ஆண்டாக தேசியக்கொடியை ஏற்றினார்.
சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியா இன்று தேசியக்கொடி ஏற்றினார். மேயராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் அவருக்கு அரசு சார்பில் சென்னை பெருநகர கட்சி பெயர் கொடி மற்றும் இலட்சினை பொருந்திய நான்கு சக்கர வாகனம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர மேயரின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகர மேயர் கொடி கடந்த ஆண்டு ஏற்றப்பட்டது.
இந்த நிலையில் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று சென்னை மேயர் பிரியா தேசிய கொடி ஏற்றினார். இதனைத்தொடர்ந்து முறையாக வரி செலுத்திய 6 பேருக்கு மேயர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும், மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 80 பணியாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
Recommended Video
சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிப்பன் மாளிகை வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தேசியக்கொடி ஏற்றினார். மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்ட பிறகு இந்த ஆண்டு பிரியா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.