சாதி சான்றிதழே தர மாட்றாங்க! சென்னை உயர்நீதிமன்றம் அருகே தீக்குளித்த நரிக்குறவர் இன இளைஞர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை : சாதிச் சான்று வழங்க மறுப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் அருகே தீக்குளித்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர், சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் நரி குறவர் சமூகத்தை சேர்ந்தவர். அவரது மகனுக்கு சாதி சான்றிதழ் கோரி அரசு நிர்வாகத்திடம் விண்ணப்பித்தும், மறுக்கப்பட்டதை கண்டித்து சென்னை உயர் நீதிமன்றம் அருகே தீக்குளித்துள்ளார்

சென்னை உயர் நீதிமன்றம் அருகே வடக்கு கோட்டை சாலையில் அமைந்துள்ள மாற்று முறை குறை தீர்வு மன்ற கட்டடம் அருகே வந்த வேல்முருகன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார்.
அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக தடுத்து காயங்களுடன் மீட்ட அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications