ஜெ.,வின் போயஸ் கார்டன் இல்லத்தை கையகப்படுத்த தீவிர நடவடிக்கை.! பத்திரிகைகளில் விளம்பரம் வெளியீடு
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னையில் வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தின் மதிப்பு ரூ.32 கோடி என தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. சென்னையில் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை, நினைவிடமாக மாற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்துள்ளார்.
24,000 சதுர அடி பரப்பளவு கொண்ட ஜெயலலிதாவின் வீட்டிற்கு ரூ.32 கோடியே 9 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு, கையகப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தரப்பு கூறியுள்ளது. ரூ.16 கோடி வரி பாக்கி வைத்துள்ளதற்காக, வருமான வரித்துறை ஜெயலலிதாவின் வீட்டை முடக்கி வைத்துள்ளது.

மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் ஆகியோரும், போயஸ் தோட்ட இல்லத்திற்கு உரிமை கோரி வருகின்றனர். எனவே போயஸ் இல்லத்தை கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து, நீதிமன்றத்தை அணுக போவதாக தீபா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி பேசிய தீபா தரப்பு வழக்கிறஞர் தொண்டன் சுப்பிரமணியன், இது ஜெயலலிதாவின் வாரிசுகளுக்கு சேர வேண்டிய சொத்து இதை விட்டு கொடுக்க முடியாது. போயஸ் தோட்ட இல்லமானது சட்டப்படி தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு தான் போய் சேர வேண்டும் என கூறினார்.
இதனிடையே ஜெயலலிதாவின் வாரிசு யார் என்று இன்னும் முடிவு செய்யப்படாததால், போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்துவதற்காக வழங்க வேண்டிய பணத்தை அரசு நீதிமன்றத்தில் செலுத்தும் என தெரிகிறது.

இதனிடையே போயஸ் தோட்ட வேதா இல்லத்தை கையகப்படுத்துவதற்காக, முறைப்படி பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்துவதில் ஆட்சேபம் ஏதும் இருப்பின், 60 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி மண்டல வருவாய் அதிகாரி சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், மேற்கண்ட அறிவிப்பு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. போயஸ் இல்லத்தை கையகப்படுத்தும் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேதா இல்லத்தை கையகப்படுத்துவது பற்றி தகவல் தெரிவித்த உயரதிகாரி ஒருவர், ஜெயலலிதா வசித்த வீட்டை நினைவில்லமாக மாற்ற பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் கூட, அரசின் கொள்கை முடிவு என்பதால் இத்திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்.
இதனால் மக்கள் யாருமே பாதிக்கப்படும் வாய்ப்பு இல்லை, மேலும் பகுதிவாசிகள் யாரும் வேறு இடத்திற்கு செல்ல வேண்டிய சூழலும் ஏற்படாது என குறிப்பிட்டார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications