மறக்க முடியாத சாந்தா.. கடைசி வரை விடாமல் போராடி ஜெயித்து மக்களின் மனங்களில் வாழும் உயர்ந்த பெண்மணி
சென்னை: அடையாறு புற்று நோய் மருத்துவமனை தலைவரான சாந்தா(93), உலகப் புகழ் பெற்ற மருத்துவர் ஆவார். தன்னலமற்ற மருத்துவ சேவை மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு மறுவாழ்வு அளித்தவர். இதற்காக அவருக்கு மகசேசே, பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பல லட்சம் மக்களின் அன்பை பெற்றவர் ஆவார்.
Recommended Video

அடையாறு புற்று நோய் மருத்துவமனை தலைவரான சாந்தா(93) உடல் நலக்குறைவால் இன்று காலாமானார். டாக்டர் வி.சாந்தா சென்னையில் 1927ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி பிறந்தவர் ஆவார். இவரது குடும்பம் இந்தியாவில் புகழ் பெற்ற அறிவியல் குடும்பம் ஆகும். சாந்தா 1949 இல் (M.B.B.S.) பட்டம் பெற்றார், 1952 ஆம் ஆண்டில் D.G.O. பட்டமும். அதன்பின்னர் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் எம்.டி பட்டமும் பெற்றார்.
1954 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட வளர்ந்து வரும் புற்றுநோய் நிறுவனத்தில் சாந்தா சேர்ந்தார், அதன்பின்னர் மெட்ராஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணரானார். பின்னர் படிப்படியாக சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தார்.

அர்பணிப்பு
சாந்தா தனது 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது முழு மருத்துவ வாழ்க்கையும் புற்றுநோய் நோயாளிகளை கவனிக்கவே அர்பணித்தார்.புற்று நோயைப் பற்றிய ஆய்வு, அதன் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து நீண்ட ஆய்வுகள் மேற்கொண்டார். அவரது ஆய்வுகள் புற்றுநோயியல் அறிவியலின் பல்வேறு அம்சங்களில் நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

முக்கியமானது
12 படுக்கைகள் கொண்ட சிறு மருத்துவமனையாக ஆரம்பிக்கப்பட்ட அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் என்று அழைக்கப்படும் சென்னை புற்றுநோய் நிறுவனத்தை தனது குரு டாக்டர் கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முக்கியமான புற்றுநோய் சிகிச்சை மையமாக வளர சாந்தாவின் அர்பணிப்பு மிக முக்கியமானது ஆகும்.

ஐசிஎம்ஆர் உறுப்பினர்
சாந்தா மார்ச் 2005 வரை புற்றுநோய் தொடர்பான உலக சுகாதார மையத்தின் ஆலோசனைக் குழுவில் இருந்தார். புற்றுநோய்க்கான மாநில ஆலோசனைக் குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்தார். மருத்துவர் சாந்தா, லிம்பாய்டு நியோபிளாசியாஸ் பற்றிய INDO-US கூட்டுக் குழுவின் தலைவராகவும், பல ஐ.சி.எம்.ஆர் குழுக்களின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

அண்ணா பல்கலை உறுப்பினர்
ஐ.சி.எம்.ஆர் பணிக்குழுவின் உறுப்பினராகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்திய புற்றுநோயியல் சங்கத்தின் (88-90) தலைவராகவும், புற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான ஆசிய மற்றும் பசிபிக் கூட்டமைப்பு அமைப்புகளின் தலைவராகவும் (97-99), 15 வது ஆசிய மற்றும் பசிபிக் புற்றுநோய் மாநாட்டின் (1999) தலைவராகவும் சாந்தா இருந்தார். பல அறிவியல் சர்வதேச ஒத்துழைப்பு திட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

மகசேசே விருது
இவர் தன்னலமற்ற மருத்துவ சேவை மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வு தந்தார். இதற்காக மகசேசே, பத்ம விபூஷண் உள்ளிட்ட உயர்ந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாளை அர்பணித்து காலம் சென்றுள்ளார் மருத்துவர் சாந்தா.

அடையாறுக்கு வரும்
புற்றுநோய் என்றாலே மரணம் வரும் என்றும் கொடூர நோய் என்றும் மக்கள் அச்சப்பட்ட நிலையில், எல்லா புற்றுநோய்க்கும் தீர்வு உண்டு என்று மக்களிடம் நம்பிக்கை அளித்தவர் சாந்தா. உலகில் எங்கேனும் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அது உடனடியாக அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அறிமுகம் செய்ய வைப்பதில் அரும்பாடுபட்டார். தனது கடைசி காலம் வரை மக்களுக்காகவே வாழ்ந்த மக்களின் மருத்துவர் தான் சாந்தா. இவரது நினைவுகள் என்றும் மக்களின் மனதில் நிற்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications