Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் மீண்டும் அழைப்பு.. ‛ஓகே’ சொன்ன டிடிவி தினகரன்.. அடுத்த மூவ் என்ன? விளக்கிய சிஆர் சரஸ்வதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் கூறிய நிலையில் அவருக்கு சாதகமான பதிலை தான் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இந்நிலையில் அமமுகவின் அடுத்த நடவடிக்கை என்ன ? என்பது பற்றி விளக்கம் அக்கட்சியின் சிஆர் சரஸ்வதி விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் உள்கட்சி பூசல்கள் வெளியே தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சியான நிலையில் தலைவர்கள் இடையேயான மனக்கசப்பு வெளிப்படையாக தெரிய தொடங்கி பூதாகரமாக வெடித்துள்ளது.

அதிமுக உள்கட்சி பூசல்

அதிமுக உள்கட்சி பூசல்

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கூறி அவரை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். இதன்மூலம் பொதுக்குழு கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வத்தை அவமானப்படுத்தி வெளியே அனுப்பி கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இருப்பினும் பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் ஓ பன்னீர் செல்வத்துக்கு ஆதரவான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லாத நிலையில் உள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஓ பன்னீர் செல்வம் அழைப்பு

ஓ பன்னீர் செல்வம் அழைப்பு

இதற்கிடையே தான் ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்து அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என கூறி வருகிறார். மனக்கசப்புகளை மறந்து ஒன்றாக செயல்படலாம் என அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். இதனை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். அதேபோல் சசிகலா மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களுக்கும் ஓ பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்தார். நேற்றைய பேட்டியின்போது இன்னும் ஓபனாக நேரில் சென்று சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரிடம் பேச உள்ளதாக ஓ பன்னீர் செல்வம் கூறினார். இதனை அவர்கள் வரவேற்றுள்ளனர்.

சசிகலா மகிழ்ச்சி-டிடிவி தினகரன் ஓகே

சசிகலா மகிழ்ச்சி-டிடிவி தினகரன் ஓகே

ஓ பன்னீர் செல்வத்தின் அழைப்பால் சசிகலா மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு டிடிவி தினகரனும், ஓ பன்னீர் செல்வத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் தான் உள்ளார். அதாவது சமீபத்திய அவரது கருத்துக்கள் என்பது ஓ பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து செயல்பட வாய்ப்புள்ளது என்பதற்கு ஓகே சொல்லும் வகையில் தான் அமைந்துள்ளது.

சிஆர் சரஸ்வதி விளக்கம்

சிஆர் சரஸ்வதி விளக்கம்

இந்நிலையில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளரான சிஆர் சரஸ்வதி இதுபற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‛‛அண்ணன் ஓ பன்னீர் செல்வம் மீண்டும் ஒருமுறை சசிகலா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்து செயல்பட வேண்டும் எனவும் அனைவரும் ஒன்றாக தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் அறிவிப்பார்

டிடிவி தினகரன் அறிவிப்பார்

எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி வர வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து தான் அம்மா மக்கள் முன்னேற்றக கழகம் பயணித்து வருகிறது. யார் யாரோடு சேர போகிறோம். என்ன செய்ய போகிறோம் என்பதை எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பார்.

உரிய முடிவு

உரிய முடிவு

நாங்கள் கடவுளிடம் வேண்டி கொள்வது எல்லாம் தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும் என்பது தான். இதன்மூலம் மக்களுக்கான திட்டங்களோடு நல்லாட்சி செய்ய வேண்டும் என்பது தான் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் விருப்பமாக உள்ளது. கண்டிப்பாக தலைவர்கள் அதற்குரிய முடிவை உரிய நேரத்தில் எடுப்பார்கள்'' என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+