ஓபிஎஸ் மீண்டும் அழைப்பு.. ‛ஓகே’ சொன்ன டிடிவி தினகரன்.. அடுத்த மூவ் என்ன? விளக்கிய சிஆர் சரஸ்வதி!
சென்னை: அதிமுகவில் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என ஓ பன்னீர் செல்வம் கூறிய நிலையில் அவருக்கு சாதகமான பதிலை தான் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இந்நிலையில் அமமுகவின் அடுத்த நடவடிக்கை என்ன ? என்பது பற்றி விளக்கம் அக்கட்சியின் சிஆர் சரஸ்வதி விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் உள்கட்சி பூசல்கள் வெளியே தெரியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சியான நிலையில் தலைவர்கள் இடையேயான மனக்கசப்பு வெளிப்படையாக தெரிய தொடங்கி பூதாகரமாக வெடித்துள்ளது.

அதிமுக உள்கட்சி பூசல்
அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கூறி அவரை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். இதன்மூலம் பொதுக்குழு கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வத்தை அவமானப்படுத்தி வெளியே அனுப்பி கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இருப்பினும் பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் ஓ பன்னீர் செல்வத்துக்கு ஆதரவான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லாத நிலையில் உள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஓ பன்னீர் செல்வம் அழைப்பு
இதற்கிடையே தான் ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்து அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என கூறி வருகிறார். மனக்கசப்புகளை மறந்து ஒன்றாக செயல்படலாம் என அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். இதனை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். அதேபோல் சசிகலா மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களுக்கும் ஓ பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்தார். நேற்றைய பேட்டியின்போது இன்னும் ஓபனாக நேரில் சென்று சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரிடம் பேச உள்ளதாக ஓ பன்னீர் செல்வம் கூறினார். இதனை அவர்கள் வரவேற்றுள்ளனர்.

சசிகலா மகிழ்ச்சி-டிடிவி தினகரன் ஓகே
ஓ பன்னீர் செல்வத்தின் அழைப்பால் சசிகலா மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு டிடிவி தினகரனும், ஓ பன்னீர் செல்வத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் தான் உள்ளார். அதாவது சமீபத்திய அவரது கருத்துக்கள் என்பது ஓ பன்னீர் செல்வத்துடன் சேர்ந்து செயல்பட வாய்ப்புள்ளது என்பதற்கு ஓகே சொல்லும் வகையில் தான் அமைந்துள்ளது.

சிஆர் சரஸ்வதி விளக்கம்
இந்நிலையில் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளரான சிஆர் சரஸ்வதி இதுபற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‛‛அண்ணன் ஓ பன்னீர் செல்வம் மீண்டும் ஒருமுறை சசிகலா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்து செயல்பட வேண்டும் எனவும் அனைவரும் ஒன்றாக தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் அறிவிப்பார்
எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி வர வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து தான் அம்மா மக்கள் முன்னேற்றக கழகம் பயணித்து வருகிறது. யார் யாரோடு சேர போகிறோம். என்ன செய்ய போகிறோம் என்பதை எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பார்.

உரிய முடிவு
நாங்கள் கடவுளிடம் வேண்டி கொள்வது எல்லாம் தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும் என்பது தான். இதன்மூலம் மக்களுக்கான திட்டங்களோடு நல்லாட்சி செய்ய வேண்டும் என்பது தான் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் விருப்பமாக உள்ளது. கண்டிப்பாக தலைவர்கள் அதற்குரிய முடிவை உரிய நேரத்தில் எடுப்பார்கள்'' என கூறியுள்ளார்.
-
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications