தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சி.பி.எஸ்.சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும், அதை பொருத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் 12ம் வகுப்பு, மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுத் தேர்வு

பொதுத் தேர்வு

இது தொடர்பாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சி.பி.எஸ்.சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும், அதை பொருத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.

கல்விக் கட்டணம்

கல்விக் கட்டணம்

கல்விக்கட்டணம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதற்கான அமைக்கப்பட்ட கமிட்டி, கல்விக்கட்டணம் தொடர்பாக மட்டுமில்லாமல், தனியார் பள்ளிகளில் வரும் புகார்கள் குறிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடிய வகையில் வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 ஆன்லைன் வகுப்புகள்

ஆன்லைன் வகுப்புகள்

ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாகவே பாடப்புத்தகம் விநியோகம் செய்வது தொடர்பாக ஓரிரு தினங்களில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

 தனியாருக்கு ஈடாக

தனியாருக்கு ஈடாக

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகளுக்கு இணையாக கட்டமைப்புகளை மேம்படுத்தி விளம்பரப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+