“குடி குடியை கொடுக்கும்”மதுவால் சீரழியும் குடும்பங்கள்..டாஸ்மாக் மூடுவிழா எப்போது?-அன்புமணி ராமதாஸ்
சென்னை : சென்னையில் காவலர் விஜயகுமார் என்பவர் குடிபோதையில் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ள நிலையில், தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த
வேண்டும் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பாதுகாப்புப் பிரிவில் காவலர் விஜயகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று குடிபோதையில் இருந்த விஜயகுமார் தகராறில் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடிபோதையால் குற்றங்கள்
இது மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடிபோதையால் குற்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. பெற்றோருடன் தகராறு ஈடுபடும் மகன்களை பெற்றோரே அடித்துக் கொள்வது, குடிக்க பணம் தராததால் பெற்றோர் மனைவியை கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. மேலும் குடிபோதையால் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில், சென்னையில் காவலர் விஜயகுமார் என்பவர் குடிபோதையில் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ள நிலையில், தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த
வேண்டும் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், " சென்னையில் முதலமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் காவலர் விஜயகுமார் என்பவர் குடிபோதையில் மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். காயம்பட்ட இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர்!

குடி குடியைக் கெடுக்கும்
குடி குடியைக் கெடுக்கும் என்பதற்கு இதை விட கொடுமையான எடுத்துக்காட்டு எதுவும் இல்லை. இது முதல் உதாரணமும் இல்லை... கடைசி உதாரணமும் இல்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஊரிலும் அரசே விற்கும் மதுவால் ஏராளமான குடும்பங்கள் சீரழிகின்றன; ஏராளமான இளம்பெண்கள் கைம்பெண்களாக்கப்படுகின்றனர்; குழந்தைகள் ஆதரவற்றவர்களாகின்றனர்!

மதுவிலக்கு வேண்டும்
இத்தகைய நிலை இனியும் தொடர்வதை அரசு அனுமதிக்கக்கூடாது. அரசின் கஜானாக்கள் 'தொழுநோயாளிகளின் கைகளில் உள்ள வெண்ணெய்'களால் நிரப்பப்படக்கூடாது. அதனால், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications