ஹலோ.. சிலை கிடைக்குமா? பக்கா ஸ்கெட்ச் போட்ட போலீஸ்! வலையில் சிக்கிய சுரேந்திரா! இத்தனை சிலைகளா?
சென்னை : சென்னை திருவான்மியூர் அருகே பழங்கால சிலைகளை விற்க முயன்ற சுரேந்திரா என்ற தரகரை வசதியான நபர்களைப் போல் அணுகிய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், நடராஜர், அம்மன், புத்தர், விநாயகர் உள்ளிட்ட 15 சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
புராதனமான கோயில்களில் இருந்து சிலைகள் கடத்தப்பட்டு வெளி மாநாடுகளுக்கு ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மாநிலம் முழுவதும் தங்களுடைய சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதன்படி தமிழகத்தின் பல பகுதிகளில் சிலை கடத்தல் பிரிவு போலீஸார் தங்களுக்குக் கிடைக்கும் ரகசிய தகவல்களை அடிப்படையாக வைத்து, கண்காணித்து தொடர்ந்து கடத்தல் சிலைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

சிலை கடத்தல்
இந்நிலையில் சென்னை திருவான்மியூர் அருகே பழங்கால சிலைகளை விற்க முயன்ற சுரேந்திரா என்ற தரகரை வசதியான நபர்களைப் போல் அணுகிய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், நடராஜர், அம்மன், புத்தர், விநாயகர் உள்ளிட்ட 15 சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர். சுரேந்திரா என்ற புரோக்கர், நடராஜர், அம்மன், புத்தர், விநாயகர் போன்ற பழங்கால சிலைகளை பல கோடி ரூபாய்க்கு விற்க முயற்சிப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் திட்டம்
இந்த தகவலையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்தி முரளி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் தினகரன், போலீஸ் சூப்பிரண்டு முரளி ஆகியோர் அந்த பிரிவின் அதிகாரிகளை சிலை சேகரிப்பாளர்களாக மாறுவேடத்தில் புரோக்கர் சுரேந்திரனை அணுக கிட்டம் தீட்டினர். இதையடுத்து டிஎஸ்பி முத்துராஜா புரோக்கர் சுரேந்திராவுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி, தன்னை சிலை ஆர்வவர் என்றும் பழங்காலப் பொருட்களை சேகரிப்பதில் வல்லவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

புரோக்கர் சுரேந்தர்
ஆரம்பத்தில் சிலைகள் பற்றிய தகவல்களை வெளியிடத் தயங்கிய புரோக்கர் பின்னர் விற்பனைக்கு வந்த சிலைகளின் படங்களை அவருடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார். தரகருடனான பல கட்ட உரையாடல்கள் ஆதாரத்தின் நோக்கத்திற்காக பதிவு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் புரோக்கர் மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகு, ரகசிய முகவரியில் கிடைத்த சிலைகளைக் காட்ட சென்னைக்கு வர ஒப்புக்கொண்டார்.

மாறுவேடத்தில் திட்டம்
திருவான்மியூர் பிள்ளையார் சந்திப்பு அருகே உள்ள ஒரு இடத்தில் காலை 3 மணிக்கு பணத்துடன் வருமாறு முத்துராஜாவிடம் புரோக்கர் தெரிவித்தார். டிஎஸ்பி முத்துராஜா மற்றும் குழுவினர் உடனடியாக குறிப்பிட்ட இடத்தை அடைந்து தனித்தனியாக சுரேந்திரன் வருவதற்காக காத்திருந்தனர். சரியாக காலை 10.31 மணியளவில் சுரேந்திரன் வந்து டிஎஸ்பி முத்துராஜாவை அழைத்துக்கொண்டு திருவான்மியூரில் உள்ள ஒரு இல்லத்திற்குச் சென்றார். குழுவின் மற்ற உறுப்பினர்கள் ஈரேந்திரனைப் பின்தொடர்ந்து ரமேஷ் பாத்தியாவின் என்பவரின் இல்லத்தில் அவரைச் சந்தித்தனர்.

15 சிலைகள் சிக்கின
திடீரென்று முத்துராஜா ஒரு போலீஸ்காரராக இருக்கலாம் என்பதை உணர்த்த சுரேந்திரன் ஓடிவிட்டார் பின்னர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சி.ஐ.டி சிறப்புக் குழு பாத்தியா வீட்டில் காலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடத்திய சோதனையின் போது அவர்கள் பழமையான 15 சிலைகளைக் கைப்பற்றினர். வளாகத்தின் உரிமையாளரான ரமேஷ் பாத்தியா தனது இரண்டு வீடுகளிலும் பல சிலைகளை வைத்திருந்தார். அதில் 15 சிலைகள் புராதனமானதாகவும், பழமையானதாகவும் தோன்றின. சிலைகளின் உரிமையாளரிடம் வாங்கியதற்கான ஆவணங்களும் இல்லை.

தொடர் விசாரணை
மேலும் அவை இந்திய தொல்லியல் ஆய்வகத்தில் பதிவு செய்யப்படவில்லை . இதனையடுத்து சட்ட நடைமுறைகளை பின்பற்றி சிலைகள் கைப்பற்றப்பட்டன. வழக்கமான தொழிலைத் தவிர்த்து பல ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டதாக உரிமையாளர் வாக்குமூலம் அளித்துள்ளார். இருந்த சிலைகள் கோவில்களுக்கு சொந்தமானவை என்றும், திருடப்பட்டவை என்றும் ஐம்பொன் சிலை பிரிவினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications