என்ன இந்த கிராமங்கள் வக்ப் வாரிய சொத்தா? இந்துக்கள் ஒன்றுசேர்ந்தால்.. நாள் குறித்த எச்.ராஜா
சென்னை: திருவெறும்பூர், தொண்டாமுத்தூர் பகுதிகளின் கிராமங்களும் வக்ப் சொத்துக்கள் என்று அறிவிக்கப்பட்டதற்கான ஆதாரங்களுடன் வந்தால் 30 நாட்களில் தீர்வு காணப்படும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் அருகே அமைந்து இருக்கிறது திருச்செந்துறை கிராமம். இப்பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்ற நபர் 1 ஏக்கர் 2 செண்ட் பரப்பளவு நிலத்தை விற்க ராஜராஜேஸ்வரி என்ற நபருடன் ஒப்பந்தம் செய்தார்.
ரூ.3.50 லட்சத்துக்கு பத்திரப்பதிவு செய்ய திருச்சி 3ம் எண் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்ற அவரிடம், இந்த நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்றும் இதை பதிவு செய்ய முடியாது என்றும் அதிகாரிகள் கூறினர்.

பாஜக எதிர்ப்பு
இந்த நிலத்தை பதிவு செய்ய வேண்டும் என்றால் சென்னையில் உள்ள வக்பு வாரியத்துக்கு சென்ற தடையில்லா சான்றிதழை பெற வேண்டும் என சார்பதிவாளர் முரளி தெரிவித்து இருக்கிறார். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கோயில்கள், வீடுகள், விவசாய நிலங்களை கொண்ட இப்பகுதி வக்பு வாரியத்துக்கு எப்படி சொந்தமாகும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

பதிவுத்துறை அறிவிப்பு
இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "3 ஆம் எண் இணைச் சார்பதிவக எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் ஒரு சில சர்வே எண்கள் மற்றும் திருச்செந்துறை கிராமம் சர்வே எண்கள் முழுவதும் திருச்சி டவுன் எல்லைக்கு உட்பட்ட ஒரு சில T.S.No-களில் கட்டுப்பட்ட சொத்துக்கள் தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று வக்ப் வாரியம் நமது அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பியது.

வக்ப் வாரிய சொத்து
ஆவணம் பதிவுக்கு வரும் முன் மேற்பட்ட சர்வே எண்களில் வக்ப் வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளதா? என சரிபார்த்த பின் ஆவணங்களை தயார் செய்து ஆவணப்பதிவுக்கு எடுத்து வருமாறு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. வக்ப் வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்கள் அடங்கிய கோப்பு 3 நீர் இணை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு பார்வைக்கு வைக்கப்பட்டது.

எச்.ராஜா எதிர்ப்பு
இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டு உள்ள பதிவில், "திருச்சென்துரை கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே நம்பரும் வக்ஃப் போர்டுக்கு சொந்தமாம். வக்ஃப் போர்டு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு கோப்பு அனுப்பும். உடனே பதிவாளர் அதை மக்களுக்கு அறிவிப்பாராம். எப்படி சாத்தியம். கோவில் நிலம் எப்படி வக்ஃப் நிலமானது. மோசடியை முறியடிப்போம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

உத்தரவு வாபஸ்
இதனை கண்டித்து கிராம மக்கள், பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டு உள்ளதாக எச்.ராஜா நேற்று பதிவிட்டுள்ளார். "வெற்றி வெற்றி. இந்துக்களின் ஒன்றுபட்ட குரலுக்கு வெற்றி. திருச்சென்துறை கிராமமே வக்ஃப் சொத்து அங்கு வக்ஃப் போர்டின் NOC இல்லாமல் பத்திரம் பதிய முடியாது என்கிற இந்து விரோத ஆணை வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதற்கு ஆண்டவனுக்கு நன்றி கூற நாளை காலை 11.00மணிக்கு சந்திரசேகர ஸ்வாமிக்கு தீபாராதனை." என்று பதிவிட்டார்.

மேலும் சில ஊர்கள்
இந்த நிலையில் எச்.ராஜா இன்று வெளியிட்டுள்ள பதிவில், "திருவெறும்பூர், தொண்டாமுத்தூர் பகுதிகளிலும் கிராமங்கள் முழுவதுமாக வக்ஃப் போர்டற்கு சொந்தம் என்று அறிவித்துள்ளதாக என் பதிவில் சிலர் பின்னூட்டம் செய்துள்ளனர். அவைகளை ஆதாரங்களுடன் கொண்டுவாருங்கள் நம் போராட்டம் தமிழகம் முழுவதற்கும் தான். இந்து ஒன்றுபட்டால் 30 நாட்களில் முழு தீர்வு." என்று குறிப்பிட்டுள்ளார்.
-
புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்! -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே












Click it and Unblock the Notifications