கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கமானவர்... ஹெச் ராஜா சொன்ன அர்த்தம் இதுதான்.. அண்ணாமலை
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை விட தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பயங்கமானவர் என்று ஹெச் ராஜா சொல்லியதன் அர்த்தம் இது தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
காந்தியடிகளின் 153வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறு காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு பாஜக சார்பில் அண்ணமாலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், அதே வளாகத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜரின் 46வது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

காமராஜர் நினைவிடம்
பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசுகையில், தமிழக அரசின் அலட்சியத்தால் கிண்டி காமராஜர் நினைவிடம் பராமரிப்பில்லாமல் உள்ளது. மதுரை செல்வதற்காக முதல்வர் இந்த வழியாக இன்று காலை விமான நிலையம் சென்றபோதும் இறங்கி அஞ்சலி செலுத்தவில்லை. அரசு செய்யவில்லையென்றால், பாஜக காமராஜர் நினைவிடத்தை ஓராண்டுக்குள் புதுப்பித்து தரும். சென்னைக்கு பலமுறை வந்த சோனியா,ராகுல் கூட காமராஜர் நினைவிடத்திற்கு வந்ததில்லை.

கருணாநிதி
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை விட தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பயங்கமானவர் என்று ராஜா சொல்லியதன் அர்த்தம் வேறு. கருணாநிதி தனிமனிதராக சிந்திக்கக்கூடியவர் ஆனால் ஸ்டாலினை வெளியில் இருந்து இயக்குகிறார்கள். அவரை பலம் வாய்ந்த சக்தியாக நான் பார்க்கவில்லை.
Recommended Video

நீட் தேர்வு
திமுக அரசு பெட்ரோல் விலையை ஜி எஸ் டிக்குள் கொண்டு வருவது பற்றி நடத்தும் ட்ராமாவை நிறுத்திக்கொள்ள வேண்டும். சமுக வலைதளங்களில் நான் பாஜகவில் சேர்வதற்கு முன்னாள் நீட் தேர்வை எதிர்த்து போலவும் தற்போது ஆதரிப்பது போலவும் வீடியோ பரவுகிறது. திமுக சமூக ஊடகங்களில் வேலை செய்யும் நண்பர்கள் மீண்டும் பள்ளி கல்லூரிக்கு சென்று படித்துவிட்டு வந்து வேலை பார்க்க வேண்டும்" இவ்வாறு அண்ணாமலை பேட்டியின்போது கூறினார்.

ட்விட்டர் ஸ்பேஸ்
டிவிட்டர் ஸ்பேசில் ஹெச் ராஜா அண்மையில் பேசுகையில், "கருணாநிதியை விட ஆபத்தானவர் மு.க.ஸ்டாலின்" என்று கூறியுள்ளார். திமுக அரசின் திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வரும் ஹெச் ராஜாவின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகியது. இது சர்ச்சையாகிய நிலையில் அதுபற்றி இன்றைய செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை விட தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பயங்கமானவர் என்று ஹெச் ராஜா சொல்லியதன் அர்த்தம் வேறு. கருணாநிதி தனிமனிதராக சிந்திக்கக்கூடியவர் ஆனால் ஸ்டாலினை வெளியில் இருந்து இயக்குகிறார்கள் எனறு அண்ணாமலை கூறினார்.












Click it and Unblock the Notifications