Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘ஆற்காடு வீராசாமி’.. வன்மையாகக் கண்டித்த கலாநிதி வீராசாமி! பேச்சுக்கு வருந்துவதாக அண்ணாமலை ட்விட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்துவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய தவறான தகவலை வேதனையுடன் வன்மையாக கண்டிப்பதாக கலாநிதி வீராசாமி கூறிய நிலையில் தனது பேச்சுக்காக வருந்துகின்றேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து கே. அண்ணாமலை பேசினார்.

அப்போது அவர், திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக தவறான தகவலை கூறினார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாஜக அண்ணாமலை

பாஜக அண்ணாமலை

இதன் காரணமாக திமுகவினர் இடையே பரபரப்பான சூழல் நிலவிய நிலையில் இந்த விவகாரம் குறித்தும் ஆற்காடு வீராசாமி குறித்து பரவும் தவறான தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது மகனும் வடசென்னை தொகுதி எம்பியுமான கலாநிதி வீராசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை நேற்று வெளியிட்டார்

கலாநிதி வீராசாமி

கலாநிதி வீராசாமி

அதில்,"தனது கொள்ளு பேரனின் பிறந்தநாள் விழாவில் நேற்று குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்த ஆர்காட்டார் (என் தந்தை) குறித்து எப்போதும் எங்கள் தலைவர்களை பற்றி உளறும் பா. ஜ.க. தலைவர் அண்ணாமலை. இன்று தவறான கருத்தை கூறியதற்கு வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் நலமாக உள்ளார்." என கூறியிருந்தார். இந்நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பேச்சுக்கு வருத்தம்

பேச்சுக்கு வருத்தம்

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"Dr. உங்களுடைய தந்தையார் அண்ணன் ஆற்காட்டார் அவர்கள் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன்! நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்து இருக்கின்றார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகின்றேன்!" என பதிவிட்டுள்ளார்.

நலமாக உள்ளார்

நலமாக உள்ளார்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பரும், திமுக முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி வயது மூப்பின் காரணமாக சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அவர் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+