சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓபிஎஸ் போனில் கிடைக்கவில்லை.. நயினார் பேச்சுக்காக எடப்பாடியிடம் வருத்தம் தெரிவித்தேன்: அண்ணாமலை

Google Oneindia Tamil News

சென்னை : நேற்று நயினார் நாகேந்திரன் பேசியது குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசிவிட்டதாகவும், நயினார் நாகேந்திரன் பேசிய போது தவறுதலாக வார்த்தை வந்து விட்டதாகவும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரன் எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பாஜக தொடர்ந்து தமிழகத்திற்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருவதாகவும் அதிமுகவில் சட்டமன்றத்தில் ஆண்மையுடன் பேசக்கூடிய ஒருவர் கூட இல்லை என கூறினார்.

அள்ளிக் கொட்டிய நயினார், மெளனம் கலைக்காத ஓபிஎஸ்-இபிஎஸ், ஆத்திரத்தில் தொண்டர்கள்.. முடிவு என்ன? அள்ளிக் கொட்டிய நயினார், மெளனம் கலைக்காத ஓபிஎஸ்-இபிஎஸ், ஆத்திரத்தில் தொண்டர்கள்.. முடிவு என்ன?

நயினார் நாகேந்திரன் சர்ச்சை

நயினார் நாகேந்திரன் சர்ச்சை

அதிமுகவில் ஆண்மை உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை என நாயனார் நாகேந்திரன் பேசியது கட்டும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதிமுக தொண்டர்கள் நயினார் நாகேந்திரனுக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு பாஜகவில் இணைந்து அதிமுக ஆதரவின் மூலம் சட்டமன்ற உறுப்பினரான நயினார் நாகேந்திரன், தற்போது ஜெயித்த பின் அதிமுகவினருக்கு ஆண்மை இருக்கின்றதா என கேட்பது எவ்வகையான மன நிலை என்று கேள்வி எழுப்பினர்.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

அதிமுகவுடன் கூட்டணி இருந்து வெற்றி பெற்று எம்எல்ஏவான நயினார் நாகேந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனித்துப் போட்டியிட்டு தனது ஆண்மையை நிரூபிப்பாரா எனவும் தொண்டர்கள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து ஃபேஸ்புக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் #நைனார்_மன்னிப்புகேள் என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. மேலும் பாஜக அதிமுக கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டுமெனவும் தொண்டர்கள் தலைமையை வலியுறுத்தி வருகின்றனர்.

அண்ணாமலை பேச்சு

அண்ணாமலை பேச்சு

நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அதிமுக மூத்த தலைவர்கள் இதுவரை பதில் கூறாத நிலையில் நயினார் நாகேந்திரன் பேசியது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசிவிட்ட தாகவும் நயினார் நாகேந்திரன் பேசியபோது ஒரு வார்த்தை தவறாக வந்துவிட்டதாகவும் இதை பெரிது படுத்த வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர் ஓபிஎஸ்சிடம் பேச முடியவில்லை எனவும், எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து பேசியுள்ளதாகவும், தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியதாக தெரிவித்தார்.

Recommended Video

    நெல்லையில் பாஜகவுக்கு ஆளே இல்ல.. நாங்கதான் நயினார் நாகேந்திரனை ஜெயிக்க வச்சோம்.. அதிமுக விமர்சனம்
    பெரிதுபடுத்த வேண்டாம்

    பெரிதுபடுத்த வேண்டாம்

    தொடர்ந்து பேசிய அண்ணாமலை பாஜக இக்கட்டான நேரங்களில் இருந்த போது அதிமுக உதவியது எனவும் இயற்கையாகவே அதிமுக பாஜக இடையே ஒரு நல்ல உறவு இருக்கிறது என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தின்போது நயினார் நாகேந்திரன் பேசியது வேறு எனவும் தவறுதலாக ஒரு வார்த்தை இடம் பெற்றதால் அதன் அர்த்தம் மாறி விட்டதாகவும் இதுகுறித்து அதிமுக தலைவரிடம் விளக்கம் அளித்துள்ளதாக கூறிய அவர் இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்க வேண்டாம் எனவும் தனது பேச்சு குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்

    English summary
    BJP Tamil Nadu leader Annamalai has said that he had spoken to AIADMK co-ordinator Edappadi Palanisamy about what Nayyar Nagendran had said yesterday and that the word had come by mistake when Nayyar Nagendran spoke.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X