திருக்கோவிலூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் மீது வழக்குப்பதிவு.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: திருக்கோவிலூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்ட கலிவரதன் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பா.ஜ.க. ஒன்றியச் செயலாளருக்கும், அவரது மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக கலிவரதன் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. திருக்கோவிலூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக கலிவரதன் போட்டியிட்டார். வாக்குப்பதிவு முடிந்த இரண்டு நாள் கழித்து 8-ம் தேதி அன்று திருவெண்ணெய்நல்லூர் பா.ஜ.க. ஒன்றியச் செயலாளராக இருக்கும் பிரபு, வாக்குப்பதிவு நிலவரம் குறித்து கலிவரதனிடம் போன் செய்து கேட்டாராம்.
அப்போது இருவருக்கும் இடையே தீவிரம் அடைந்த பேச்சு, கடைசியில் கடும் வாக்குவாதமாக மாறியதாம். பிரபுவின் பேச்சில் கலிவரதன் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் பா.ஜ.க. வேட்பாளர் கலிவரதன் தனது ஆதரவாளர்கள் 9 பேருடன் சிறுவானுர் கிராமத்தில் இருக்கும் பிரபுவின் வீட்டுக்கு கோபத்துடன் கிளம்பி சென்றார்.
வீட்டில் இருந்த பிரபுவின் மனைவி செல்லம்மாளை கலிவரதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரக்குறைவாக திட்டியுள்ளனராம். மேலும் கணவர் - மனைவி இருவரையும் கொலை செய்து விடுவதாகவும் அவர்கள் மிரட்டி உள்ளனராம். இதுகுறித்து செல்லம்மாள் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஜக வேட்பாளர் கலிவரதன் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம்












Click it and Unblock the Notifications