Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் குரங்கு அம்மை ஆய்வகம்.. மத்திய அரசு அனுமதி..செஸ் வீரர்களுக்கு பரிசோதனை - மா.சுப்ரமணியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரங்கு அம்மையை கண்டறியும் ஆய்வகத்தை சென்னையில் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்கள் அனைவருக்கும் குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்படுவதாகவும் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் போலவே உலக நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் நோய் பரவி வருவதால் மக்கள் மத்தியில் மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது. இதிலும் இந்த நோயும் இந்தியாவில் பரவியதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Central Govt Allowed Monkey Pox Laboratory in Chennai says M. Subramanian

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த கேரள நபரின் மூலம் இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது. தற்போது கேரளாவில் 3 பேர் மற்றும் தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு என குரங்கு அம்மையால் இந்தியாவில் மட்டும் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக கேரள எல்லையில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்படவில்லை என்று கூறினார்.

Recommended Video

    குரங்கு அம்மை பரவல்.. மாநில எல்லை, விமான நிலையங்களில் கண்காணிப்பு..

    வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு குரங்கு அமைக்கான அறிகுறி உள்ளதா என தீவிரமாக பரிசோதிக்கப்படுகிறது. கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் குரங்கு அம்மைக்கான பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+