வாவ் நம்ம சென்னையா இது.. சிற்பங்களாய் உலா வரும் வாகனங்கள்.. ஊரே சூப்பரா மாறிப் போச்சு!
சென்னை: சென்னை மாநகரில் புதிதாக ஒரு அட்ராக்ஷன் இணைந்துள்ளது.
Recommended Video
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிங்கார சென்னை கனவை நனவாக்க பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகர ஆணையர் மேற்கொண்டு வருகிறார்.
அதன்ஒரு பகுதியாக பல்வேறு வழக்குகளில் சிக்கிய வாகன கழிவுகளை பயனுடையதாக மாற்ற திட்டமிடப்பட்டது.

காயலான் கடை வண்டிகள்
அதேபோல் பேசின் பிரிட்ஜ், புதுப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி வாகனங்களை பழுது நீக்கும் நிலையங்களில் இருக்கும் காலாவதியான வாகனங்களையும் பயனுடையதாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

வாகனக் கழிவுகளிலிருந்து மீன்
அதன்படி வாகன கழிவுகளை கொண்டு உருவாக்கப்பட்ட மீன், நண்டு, இறால் ஆகிய பிரம்மாண்ட.. கண்கவர் சிற்பங்கள் மெரினா கடற்கரையின் புல்வெளிகளில் தற்போது ஒய்யாரமாக காட்சியளிக்கின்றன. மெரினாவுக்கு வரும் சிறியவர்கள், பெரியவர்கள் அனைவரும் சிற்பங்களை கண்டு ரசிப்பதுடன் அருகில் நின்று செல்ஃபி எடுத்தும் மகிழ்கின்றனர்.

செம ஐடியா
இதற்காக சென்னை மாநகராட்சிக்கு பாராட்டையும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பேசிய சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இந்த பணிகளுக்காக 29 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மக்கள் அதிகம் கூடும் பெசன்ட் நகர் கடற்கரை, சென்னை விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிலைகள் வைக்கப்படவுள்ளன.

பிரமாண்டி சிலைகள்
அதேபோல மக்கள் அதிகம் வரும் கோயம்பேடு காய்கறி சந்தை மற்றும் தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களிலும் இதுபோன்ற சிலைகள் வைக்கப்படும் என்றும் கூறினார். ஏற்கனவே இதுபோல ஐசிஎப்பில் ஒரு பிரமாண்ட சிலை வைக்கப்பட்டு மக்களைக் கவர்ந்துள்ளது என்பது நினைவிருக்கலாம். இதேபோல இப்போது சென்னை முழுவதும் வைக்கப்படுகிறது.

சீர்மிகு சென்னை
வரும் நாட்களில் இதுபோன்று வாகன கழிவுகளிருந்து சிற்பங்கள் செய்து சென்னை மாநகரின் முக்கிய இடங்களில் வைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். வெளிநாடுகளில்தான் இதுபோல வைப்பார்கள். இப்போது சிங்கார சென்னை சிற்பங்களின் சென்னையாக.. கண்ணையும்.. கருத்தையும் கவரும் சென்னையாக மாறியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.












Click it and Unblock the Notifications