வாவ் நம்ம சென்னையா இது.. சிற்பங்களாய் உலா வரும் வாகனங்கள்.. ஊரே சூப்பரா மாறிப் போச்சு!
சென்னை: சென்னை மாநகரில் புதிதாக ஒரு அட்ராக்ஷன் இணைந்துள்ளது.
Recommended Video
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிங்கார சென்னை கனவை நனவாக்க பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகர ஆணையர் மேற்கொண்டு வருகிறார்.
அதன்ஒரு பகுதியாக பல்வேறு வழக்குகளில் சிக்கிய வாகன கழிவுகளை பயனுடையதாக மாற்ற திட்டமிடப்பட்டது.

காயலான் கடை வண்டிகள்
அதேபோல் பேசின் பிரிட்ஜ், புதுப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி வாகனங்களை பழுது நீக்கும் நிலையங்களில் இருக்கும் காலாவதியான வாகனங்களையும் பயனுடையதாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

வாகனக் கழிவுகளிலிருந்து மீன்
அதன்படி வாகன கழிவுகளை கொண்டு உருவாக்கப்பட்ட மீன், நண்டு, இறால் ஆகிய பிரம்மாண்ட.. கண்கவர் சிற்பங்கள் மெரினா கடற்கரையின் புல்வெளிகளில் தற்போது ஒய்யாரமாக காட்சியளிக்கின்றன. மெரினாவுக்கு வரும் சிறியவர்கள், பெரியவர்கள் அனைவரும் சிற்பங்களை கண்டு ரசிப்பதுடன் அருகில் நின்று செல்ஃபி எடுத்தும் மகிழ்கின்றனர்.

செம ஐடியா
இதற்காக சென்னை மாநகராட்சிக்கு பாராட்டையும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பேசிய சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இந்த பணிகளுக்காக 29 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மக்கள் அதிகம் கூடும் பெசன்ட் நகர் கடற்கரை, சென்னை விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிலைகள் வைக்கப்படவுள்ளன.

பிரமாண்டி சிலைகள்
அதேபோல மக்கள் அதிகம் வரும் கோயம்பேடு காய்கறி சந்தை மற்றும் தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களிலும் இதுபோன்ற சிலைகள் வைக்கப்படும் என்றும் கூறினார். ஏற்கனவே இதுபோல ஐசிஎப்பில் ஒரு பிரமாண்ட சிலை வைக்கப்பட்டு மக்களைக் கவர்ந்துள்ளது என்பது நினைவிருக்கலாம். இதேபோல இப்போது சென்னை முழுவதும் வைக்கப்படுகிறது.

சீர்மிகு சென்னை
வரும் நாட்களில் இதுபோன்று வாகன கழிவுகளிருந்து சிற்பங்கள் செய்து சென்னை மாநகரின் முக்கிய இடங்களில் வைக்க திட்டமிட்டு உள்ளதாகவும் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். வெளிநாடுகளில்தான் இதுபோல வைப்பார்கள். இப்போது சிங்கார சென்னை சிற்பங்களின் சென்னையாக.. கண்ணையும்.. கருத்தையும் கவரும் சென்னையாக மாறியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
-
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications