மிரட்டும் மழை..சென்னை தத்தளிக்கப்போகிறது..போட் ரெடி பண்ணுங்க..அண்ணாமலை அலர்ட்
சென்னை: பருவமழை காலத்தில் சென்னை தத்தளிக்கப்போகிறது என்றும் மழைநீர் வடிகால் பணிகள் சரிவர நடக்கவில்லை எனவே, வெள்ளத்தை சமாளிக்க எல்லோரும் போட் ரெடி செய்து வைத்துக்கொள்ளுங்கள் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. மழைக்காலத்திற்கு முன்பே சென்னையில் அவ்வப்போது பெய்யும் லேசான மழைக்கே பல இடங்களில் வெள்ளநீர் தேங்கி வருகிறது. பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதலே பருவமழை காலத்தில் பெருவெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகிறது. எனவே மழை காலத்தில் வெள்ளநீர் தேங்காமல் தடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையில் கொசஸ்தலையாறு வடிகால் திட்டம், கோவளம் வடிகால் திட்டம், சிங்காரச் சென்னை 2.0 திட்டம், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம் என பலவகையான திட்டங்களில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. புதிதாக வடிகால்கள் அமைப்பது மட்டுமின்றி, ஏற்கெனவே இருக்கிற வடிகால்களில் பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 85 சதவிகிதம் நிறைவு பெற்று விட்டதாக ஆளும் அரசு கூறி வருகிறது. ஆனால் மழை நீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது என்பது பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றச்சாட்டு.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, பருவமழை காலத்தில் சென்னை தத்தளிக்கப்போவதாக கூறினார். மழைநீர் வடிகால் பணிகள் முழுமை பெறவில்லை என்றும் அனைவரும் போட் வாங்கி வைத்துக்கொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தி தெரியாது என்று கூறும் திமுகவினர் அவர்கள் நடத்தும் பள்ளிகளில் கூட தமிழை கட்டாயமாக்கவில்லை என்று குற்றம் சாட்டினார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications