Chennai SIR: 3ல் ஒரு பங்கு காலி.. சென்னையில் எந்த காரணத்திற்காக அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் தெரியுமா?
பீகாரில் கடந்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கு முன்பு அங்கு மாநிலம் முழுக்க சார் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்தது. அதில் பல போலி வாக்காளர்கள், இரட்டை பதிவுகள், உயிரிழந்தோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. பீகாரை தொடர்ந்து பல மாநிலங்களிலும் சார் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
அதன்படி தமிழ்நாட்டில் சார் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சார் பணிகளின் தேதி தமிழ்நாட்டில் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. கடந்த 14 வரை வாக்காளர்கள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் சென்னை மாவட்டத்தில் தான் அதிகபட்ச வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு முன்பு சென்னையில் 40.04 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், சார் பணிகளில் 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதாவது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 35% நீக்கப்பட்டுள்ளனர்.
மூன்றில் ஒரு பகுதியினர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 14,25,018 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகபட்சமாக 12,22,164 பேர் இடம் மாறியவர்கள் என்பதற்காக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதைத் தொடர்ந்து உயிரிழந்ததாகச் சொல்லி 1,56,555 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதேபோல தொடர்பு கொள்ள முடியாதவர்கள் என்று 27,328 பேர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், இரட்டை பதிவு என்ற முறையில் 18,772 பேரும் மற்ற காரணங்கள் என 199 பேரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications