சென்னையில் முதல் முறையாக.. ஏசி மின்சார பேருந்து சேவை.. நாளை தொடங்கி வைக்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் முதல் முறையாக ஏசி மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது. 233 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 55 மின்சார ஏசி பேருந்துகள் உட்பட 135 மின்சார பேருந்து சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து நாளை முதல் மின்சார பேருந்துகள் சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

Chennai to Launch First AC Electric Bus Service Udhayanidhi Stalin to Flag Off 135 Buses Tomorrow

முதல் முறையாக ஏசி வசதி கொண்ட மின்சார பேருந்து சேவைகள் நாளை முதல் சென்னையில் இயக்கப்பட உள்ளன. சென்னை வியாசர்பாடியை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நாளை முதல் பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 55 ஏசி மின்சார பேருந்துகள் உட்பட 135 மின்சார பேருந்துகள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது என மாநகர் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

135 மின்சார பேருந்துகளில் 55 ஏசி மின்சார பேருந்துகளும், 80 மின்சார பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதற்கான பெரும்பாக்கம் பணிமனை பணியாளர்களுக்கான ஓய்வறை, பராமரிப்புக் கூடம், அலுவலக நிர்வாக கட்டிடம் உள்ளிட்ட வசதிகளுடன் புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மின்சார பேருந்துகளுக்கான சார்ஜிங் பாயிண்ட்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சென்னையில் மின்சார பேருந்துகளுக்காக வியாசர்பாடி, பெரும்பாக்கம், சென்ட்ரல், பூந்தமல்லி, தண்டையார்பேட்டை ஆகிய 5 பணிமனைகளில் இருந்து மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் ஜூன் 30 ஆம் தேதி முதல் வியாசர்பாடி பணிமனையில் இருந்து மின்சார பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 மின்சார பேருந்துகள் 11 வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் கட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து நாளை முதல் 55 மின்சார ஏசி பேருந்துகள், 80 மின்சார பேருந்துகள் உட்பட 135 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

49.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள பெரும்பாக்கம் மின்சார பேருந்துகள் பணிமனை மற்றும் இரண்டாம் கட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 233 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 55 மின்சார ஏசி பேருந்துகள் உட்பட 135 மின்சார பேருந்து சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக பெரும்பாக்கம் பணிமனையில் மின்சார பேருந்துகள் தயார் நிலையில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+