அரசு பங்களாவில் குடியேற போகும் ஸ்டாலின்.. யார் வசிக்கும் இல்லம் தெரியுமா? பரபர தகவல்!
சென்னை: சென்னை சித்தரஞ்சன் சாலை பங்களாவிலிருந்து அரசு பங்களாவுக்கு குடியெற முதல்வர் முக ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் சபாநாயகர் தனபால் குடியிருந்து வரும் குறிஞ்சி இல்லத்தில் குடியேற திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்காக அந்தப் பங்களாவைக் காலிசெய்து கொடுக்குமாறு அரசு தரப்பிலிருந்து தனபாலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
Recommended Video
சென்னை ஆர்.ஏ.புரம் பசுமைவழிச் சாலையில்தமிழக அமைச்சர்களுக்கான அரசு பங்களாக்கள், நீதிபதிகள் குடியிருப்பு ஆகியவை உள்ளன. இந்த பகுதியே மிகமிக அதிகப்படியான மரங்களால் சூழப்பட்டு மிகவும் பசுமையாக காணப்படும். இங்குள்ள அரசு பங்களாக்களில்தான் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வமும் வசித்து வந்தனர். இதேபோல் சபாநாயகர் மற்றும மற்ற அமைச்சர்களும் வசித்து வந்தார்கள்.
ஆனால் கருணாநிதி , ஜெயலலிதா இருவரும் முதல்வராக இருந்த காலக்கட்டத்தில், அவரவர்களின் சொந்த வீட்டில் இருந்தபடியே ஆட்சியை நடத்தி வந்தார்கள். கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் இருந்தும், ஜெயலலிதா போயஸ் தோட்ட பங்களாவிலும் குடியிருந்தபடி ஆட்சி செய்து வந்தனர். அரசு பங்களாக்களில் இவர்கள் குடியேறவில்லை. அவர்களின் பங்களாக்களே முதல்வரின் கேம்ப் அலுவலகமாகவும் அந்த காலத்தில் இயங்கி வந்தன.

அரசு பங்களா
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலை பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்போது சித்தரஞ்சன் சாலை பங்களாவில் இருந்து ஆர்.ஏ.புரத்தில் உள்ள அரசு பங்களாவுக்கு இடமாறுவதற்கு ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

நீண்ட ஆலோசனை
முதல்வர் மு.க. ஸ்டாலின். அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துவது, ஐஏஏஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது. காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்துவது என பலமணி நேரம் தனது சித்தரஞ்சன் இல்லத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது வீட்டில் இருந்து அரசு பங்களாவில் குடியேறி இத்தகைய ஆலோசனைகளை நடத்த விரும்புகிறாராம். .

விரைவில் மாறுகிறார்
அரசின் நிர்வாகத்தைக் கவனிக்கவும், அமைச்சர்களை அவசர ஆலோசனைகளுக்காக அழைத்து விவாதிக்கவும் அரசு பங்களாவே சரியானதாக இருக்கும் என்று ஸ்டாலின் கருதுகிறாராம்., அதனால் விரைவியே அரசு பங்களாவுக்கு மாறவாய்ப்பு உள்ளதாம்.

குறிஞ்சி இல்லம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சி காலமான 2006 - 2011 ஆண்டு வரையிலான ஆட்சி காலத்தில் ஸடாலின் உள்ளாட்சி துறை அமைச்சராகவும், அதன்பின்னர் துணை முதல்வராகவும் பொறுப்பு வகித்தார். அப்போது பசுமை வழிச்சாலையில் உள்ள அரசு பங்களாவான குறிஞ்சி இல்லத்தில்தான் தங்கியிருந்தார். அதே குறிஞ்சி இல்லத்தில் தங்கி அரசு பணிகளைக் கவனிக்கத் ஸ்டாலின் விரும்புவதாக தலைமை செயலக வட்டாரங்கள் சொல்கின்றன.

அதிமுக ஆட்சி
அதிமுக ஆட்சியில், இந்தக் குறிஞ்சி இல்லம், சபாநாயகராக இருந்த தனபாலுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகால அவர் தான் அங்கு வசித்து வருகிறார். அந்தப் பங்களாவைக் காலிசெய்து கொடுக்குமாறு அரசு தரப்பிலிருந்து தனபாலுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாம். பங்களா காலியானதும் அதனைப் புனரமைக்கும் பணிகளைப் பொதுப்பணித்துறையினர் கவனிக்க உள்ளதாக அதிகாரிகள் தரப்பு கூறுகிறது. குறிஞ்சி இல்லம் புதுப்பிக்கப்பட்ட பிறகு ஸ்டாலின் குடியேறுவாராம்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications