சிக்னலில் சிக்கிய ஆம்புலன்ஸ்! பதறிப் போன முதல்வர்! சட்டென கான்வாயை நிறுத்தி.. அசந்து போன மக்கள்
சென்னை : தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்ட நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததால் முதலமைச்சர் கான்வாய் வாகனத்தை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு காவல்துறையினர் வழி ஏற்பாடு செய்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்திற்கு தமிழக முதலமைச்சர் இன்று காலை வருகை தந்து மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு விடுதியை திறந்து வைத்தார்.

அதன் பிறகு தலைமைச் செயலகத்திலிருந்து அண்ணா அறிவாலயத்திற்கு புறப்பட்ட தமிழக முதலமைச்சர்
மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து வெளியே புறப்படும்போது, தலைமைச் செயலக சிக்னலில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சிக்கி நின்றது.
உடனடியாக சுதாரித்த காவல்துறையினர் முதலமைச்சரின் கான்வாய் வாகனம் நான்கு அடி தூரத்தில் இருந்தாலும் உடனடியாக பாதுகாப்பு வாகனங்களை நிறுத்திவிட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழியை ஏற்பாடு செய்தனர். பிறகு தமிழக முதலமைச்சரின் கான்வாய் வாகனத்திற்கு காவல்துறையினர் வழிவிட்டனர்,
நேற்றைய தினம் தமிழக அரசு ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இடையூறு செய்பவர்களுக்கு பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என அரசாணை வெளியிட்ட நிலையில் இன்று முதலமைச்சர் உடைய பாதுகாப்பு கான்வாய் வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி ஆம்புலண்ஸ் வாகனத்திற்கு வழிவிட்ட இந்த நிகழ்வு முன்னுதாரணமாக அமைந்திருப்பதாக காவல்துறையினர் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications