சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க அனுமதி... 34 மாவட்டங்களில் அனுமதி இல்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று தனது அலுவலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, உலக சுகாதார நிறுவன முதுநிலை மண்டல குழு தலைவர் கே.எம்.அருண் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை மேலும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், மூன்றாம் நிலை ஏற்படாமல் தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மூன்றாம் நிலை ஏற்பட்டால் மருத்துவமனையில் மேற்கொண்டு செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பேருந்து சேவை

பேருந்து சேவை

இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குளிர்சாத வசதி பேருந்துகளுக்கு அனுமதி இல்லை,

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்லூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பேருந்துசேவைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை

8 மாவட்டங்கள்

8 மாவட்டங்கள்

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்லூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பேருந்துசேவைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை

பேருந்து சேவை

பேருந்து சேவை

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கொரோனா தொற்று அதிகம் உள்ள காரணத்தால் 34 மாவட்டங்களுக்கு பேருந்து சேவை அனுமதி அளிக்கப்படவில்லை

இபாஸ் எதற்கு தேவை

இபாஸ் எதற்கு தேவை

27 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டேக்ஸிகள், ஆட்டோக்களில் செல்ல இபதிவு தேவையில்லை. கொடைக்கானல், ஊட்டி, ஏலகிரி, ஏற்காடு போன்ற மலைவாசல் தளங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர்களிடம் இபாஸ் பெற்று மட்டுமே செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+