முதலமைச்சர் எனக்கு “ஃபுல் சப்போர்ட்”.. தமிழகத்தில் பணவீக்கம் குறைவு - மத்திய அரசை விளாசிய பிடிஆர்
சென்னை: மாதா மாதம் புதிய ஜிஎஸ்டி கொண்டு வருவது ஒன்றும் வித்தையில்லை என்றும், சூழலை பொறுத்து வரி விகிதங்கள் மாறுவது இயற்கையானது எனவும் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் விலை உயர்வால் பொதுமக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டது. கொரோனாவால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் சர்வதேச அளவில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

மாநில திட்டம்
திட்டங்களுக்கான செலவை தாண்டி கொரோனா காலத்தில் கூடுதல் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் சாமானிய மக்களின் வாங்கும் சக்தி குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும். மாநில அரசுக்கு என்று சில பொருளாதார நோக்கங்கள் உள்ளன. மாநில பொருளாதார திட்டங்களை இப்படிதான் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வரையறுக்கிறது.

நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னிடம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க சொன்னார். உங்களுக்கு முன்பே நாங்கள் குறைத்துவிட்டோம் என்று சொன்னேன். மாநில அரசுகள் இவ்வளவுதான் கடன் எடுக்க முடியும் என்று மத்திய அரசு கட்டளை இடுகிறது. அவர்களுக்கு அதுபோன்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. அவர்கள் 18 ஆண்டுகளாக தேவையான அளவு கடன் வாங்குகிறார்கள்.

கடன்
கடன் வாங்குவதும், திட்டங்கள் செயல்படுத்துவது அனைத்தையும் நீங்களே முடிவு செய்கிறீகள் என்றால் உங்கள் திட்டங்கள் நாங்கள் சொல்வதைபோல் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். பொதுவிநியோக திட்டங்களுக்கு நாம் அதிகம் செலவழித்து உள்ளோம்.

ஜிஎஸ்டி
மத்திய அரசின் ஜிஎஸ்டி வருமானம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 37% அதிகரித்து இருக்கிறது. மாதா மாதம் புதிய ஜிஎஸ்டி கொண்டு வருவது ஒன்றும் வித்தையில்லை. சூழலை பொறுத்து வரி விகிதங்கள் மாறுவது இயற்கையானது. நாட்டின் விதிக்கப்பட்டும் ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி விகிதங்கள் நியாயமாக இருக்கிறதா என்பதே தற்போதைய கேள்வி.

முதலமைச்சர் ஆதரவு
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் சாமானிய மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க முடியும் என்ற இலக்கில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் 7% ஆக உள்ள பணவீக்கம் தமிழ்நாட்டில் 5% ஆக உள்ளது. இதுவே நமக்கு பெரும் வெற்றி. தேவையற்ற செலவுகளை குறைத்து தேவைக்கு மட்டும் செலவழித்ததால் இது நடந்தது. நிதி அமைச்சகத்திற்கும், எனக்கும் முதலமைச்சர் முழு ஆதரவு கொடுப்பதால் நல்ல இலக்கில் செயல்பட எங்களால் முடிகிறது.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
75 லட்சம் பேர் மகிழ்ச்சி.. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 50000 ரூபாய்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும்












Click it and Unblock the Notifications