ஆபாச பேச்சு.. வீடியோ.. ரவுடி பேபி சூர்யா உள்ளிட்டோர் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்
சென்னை: இணையத்தில் ஆபாச வார்த்தைகளைப் பேசி வீடியோ பதிவிடும் ரவுடி பேபி சூர்யா உட்பட பலர் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் பள்ளி சிறுவர் சிறுமியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் இணையத்தில் பாடம் பயின்று வருகின்றனர்.

அவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இணையத்தில் ஆபாசமான வார்த்தைகளை பேசி வீடியோ பதிவிட்டு வரும் ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, ஜி பி முத்து, காத்து கருப்பு உள்ளிட்ட பலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவர்களது இணையதளத்தை முடக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி தென்சென்னை மாவட்ட செயலாளர் புனிதவல்லி சமூக ஆர்வலர் சுமித்ரா ஆகியோர் அளித்தனர்.
மேலும் இணையம் வாயிலாக கல்வி வியாபாரம் சமையல் மருத்துவ குறிப்பு ஆன்மீகம் கலைத்திறமை குடும்ப உறவுகளின் உறவு என அனைத்தும் குறித்து வீடியோக்கள் வெளியாகி உள்ளது.
மக்களின் மன நிலைமையும் நாகரிகத்தையும் ஒழுக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் ஆபாசம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து வீடியோ வெளியிடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்,












Click it and Unblock the Notifications