75 நாட்களாக ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி ஏன் வரவில்லை? புயலை கிளப்பும் செல்வப்பெருந்தகை!
சென்னை: 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி ஏன் வரவில்லை என காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை வினவியுள்ளார்.
தனது நீண்டகால நண்பரான ஜெயலலிதாவை, சக்தி வாய்ந்த பிரதமர் பதவியில் உள்ள மோடி நேரில் வந்து பார்த்து, அவரது உடல்நலம் குறித்தும், சிகிச்சைகள் குறித்தும் மக்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் இருந்தபோது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நேரில் வந்து நலம் விசாரித்து சென்றதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக செல்வப்பெருந்தகை விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
தேர்தலை சந்திக்கும் குஜராத்துக்கு ஜாக்பாட்! ரூ15,670 கோடி திட்டங்கள்- இன்று தொடங்கி வைக்கும் மோடி!

நெருங்கிய நட்பு
''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக என்ற தமிழகத்தின் பிரதான கட்சியின் தலைவர் ஜெயலலிதா, முதல்வராக இருந்தவர். அவருக்கே முறைப்படி சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜெயலலிதாவுக்கும் நெருங்கிய நட்பு உண்டு.''

75 நாட்கள் மருத்துவமனையில்
''மோடி குஜராத் முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியில் மூன்று முறை நேரில் பங்கேற்றவர். 2011-ல் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது, குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி வந்திருந்தார். குஜராத் முதல்வராக இருந்தபோதும், பிரதமராக இருந்தபோதும் மோடிக்கு தனது போயஸ் தோட்ட இல்லத்தில் விருந்தளித்தவர் ஜெயலலிதா. ஆனாலும், அவர் 75 நாட்கள் மருத்துவமனையில், எப்படி இருக்கிறார் என்பது தெரியாத நிலையில் சிகிச்சை பெற்றபோதும் பிரதமர் மோடி நேரில் வந்து பார்க்கவில்லை.''

ராகுல் வந்தார்
''அரசியல் ரீதியாக அ.தி.மு.க.வுக்கு நேர் எதிரணியில் இருந்தாலும், ராகுல் காந்தி நேரில் வந்து உடல்நலம் விசாரித்துச் சென்றார். தனது நீண்டகால நெருங்கிய நண்பரான ஜெயலலிதாவை, சக்தி வாய்ந்த பிரதமர் பதவியில் உள்ள மோடி நேரில் வந்து பார்த்து, அவரது உடல்நலம் குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மக்களுக்கு உண்மைகளை தெரிவித்திருந்தால், இன்றைய சிக்கல்களே எழுந்திருக்காது. ''

மோடி ஏன் வரவில்லை?
''எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் இருந்தபோது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நேரில் வந்து நலம் விசாரித்தார். அவரது முயற்சியாலேயே எம்.ஜி.ஆர். சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார். அதுபோல, பிரதமர் மோடி, ஜெயலலிதாவா நேரில் வந்து பார்த்திருந்தால், சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற சந்தேகங்கள் தற்போது தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications