அதிகரிக்கும் கொரோனா - பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு
தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் காலவரையரையின்றி தள்ளி வைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். விடுமுறை நாட்களை மாணவர்கள் படிப்பதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் முடிவுக்கு வந்து விட்டது என்று கடந்த நவம்பர் மாத இறுதியில் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் ஓமிக்ரான் பரவத் தொடங்கியது. இதனையடுத்து டிசம்பர் மாதம் நடைபெற இருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜனவரி முதல் கொரோனா மீண்டும் வீரியமாக பரவத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கு ஜனவரி 20ஆம்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் 21ஆம் தேதி முதல் தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தையும் சென்னை பல்கலைக்கழகம் ஒத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுவதாக தெரிவித்தார்.
செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டாலும் கல்லூரிகளில் செய்முறை தேர்வுகள் மட்டும் நடைபெறும் என்றும் கூறினார். கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் பல்கலைக்கழக தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். விடுமுறை நாட்களை மாணவர்கள் படிப்பதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் பொன்முடி கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications