சாரை சாரையாக வந்த மக்கள்... இலக்கை தாண்டி 24 லட்சம் தடுப்பூசி செலுத்தி சாதனை - மா.சுப்ரமணியன்
மெகா தடுப்பூசி முகாமிற்கு மக்கள் பெருமளவில் வரவேற்பு தந்துள்ளார்கள் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். நாங்கள் நினைத்ததை விட மதியம் 12 மணியளவில் எங்கள் இலக்கை அடைந்துவிட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: தடுப்பூசி செலுத்துவதை திருவிழாவைப் போல் தமிழகம் முழுவதும் கொண்டாடி கொண்டிருக்கிறோம் என்று அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார். மக்களே சாரை சாரையாக வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதால் அவர்களை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று ஞாயிறுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்களில் தடுப்பூசிகளைப் போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மூன்றாவது முறையாக நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமில், கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன. தடுப்பூசி முகாமில் இலக்கு வைக்கப்பட்டதை விட 9.85 லட்சம் டோஸ் அதிகமாக தமிழ்நாடு பயன்படுத்தியது, வழங்கப்பட்ட அளவுகளின் எண்ணிக்கை 24 லட்சத்தை தாண்டியது. 15 லட்சம் டோஸ் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய 12 மணி நேரப் பயிற்சியின் முடிவில், 24,85,814 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட 14,90,814 பேர் முதல் டோஸைப் பெற்றனர், 9,95,000 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டது.
அரசு திட்டமிட்டதை விட 9,85,814 டோஸ் அதிகமாக நிர்வகிக்கப்பட்டது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. செப்டம்பரில் இதுவரை 1,38,60,328 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 12 அன்று நடந்த முதல் மெகா தடுப்பூசி முகாமில் 28,91,021 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற இரண்டாவது முகாமில், 10,85,097 பேருக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டது மற்றும் 5,58,782 பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன், மத்திய அரசிடம் மொத்தம் 50 லட்சம் தடுப்பூசிகள் கேட்டிருந்தோம், ஆனால் 28 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வந்து இருந்தது அதை மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பி 24 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார். 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
நாங்கள் கேட்டது போல 50 லட்சம் தடுப்பூசிகள் இந்த வாரத்தில் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டால் நான்காவது மெகாவார தடுப்பூசி போடுவது தொடர்பான அறிவிப்பு இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என்றும் கூறினார்.
மேலும் தடுப்பூசி செலுத்துவதை திருவிழாவைப் போல் தமிழகம் முழுவதும் கொண்டாடி கொண்டிருக்கிறோம். மக்களே சாரை சாரையாக வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொள்கிறார்கள் அதனால் அவர்களை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார். அப்படியே தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள அவர்களை கட்டாயபடுத்தினால் அதில் தவறும் இல்லை என்றும் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications