முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ 10 லட்சம் அபராதம்.. சென்னையில் அதிர்ச்சி!
சென்னை: சென்னையில் முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ 10 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. மேலும் 5,040 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் இருந்து வருவதால் முகக் கவசம் கட்டாயம் என உலகம் முழுவதும் உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் அலையின் போது இதை பின்பற்றாதவர்களுக்கு அபராதமும் வழக்குப் பதிவும் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது மூன்றாவது அலை எந்த நேரத்திலும் பரவும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் புதிய உருமாறிய வைரஸ் மத்திய பிரதேசத்தில் 5 பேரிடம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட கொண்டாட்டங்களால் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இது போன்ற பண்டிகை காலங்களில் கொரோனா அதிகம் பரவி வருவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் தீபாவளி பண்டிகை வரும் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் புத்தாடை வாங்குவதற்கும் பட்டாசுகளை வாங்குவதற்கும் கடைத் தெருக்களில் அதிகம் குவிகிறார்கள். சென்னையில் இருந்து துணிகளை வாங்க பல ஊர்களில் இருந்து மக்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். தி.நகர், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம் உள்பட இடங்களில் குவிகிறார்கள்.
புத்தாடைகள் எடுக்கும் உற்சாகத்தில் கொரோனாவை மறந்துவிடுகிறார்கள். 3ஆவது அலை எப்போது வேண்டுமானாலும் பரவும் என சொல்லப்படுவதால் மக்களை கண்காணிக்க போலீஸாரும் மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். சென்னையில் முகக் கவசம் அணியாமல் வந்த 5,040 பேரிடம் இருந்து ரூ 10 லட்சத்து 8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் வசூலித்து வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பொருட்கள் வாங்க வரும் கடை வீதிகள், மார்க்கெட் பகுதிகள், பஸ், ரெயில் நிலையங்களில் முக கவச சோதனை நடத்தப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல் வெளிவரும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications