Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடும் தட்டுப்பாடு... சென்னையில் தடுப்பூசி முகாம்கள் மீண்டும் நிறுத்தம் - மாநகராட்சி அறிவிப்பு

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று ஜூன் 30ஆம் தேதி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று ஜூன் 30ஆம் தேதி தடுப்பூசி முகாம்கள் நடைப்பெறாது எனவும், தடுப்பூசி வந்த பின் மாநகராட்சிக்கு உட்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2 மாதமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி தனி கவனம் செலுத்தி வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

Coronavirus vaccine shortage in Chennai camps suspended on Today

அந்த வகையில், ஜூன் 28 ஆம் தேதி வரையிலும் 25,35,154 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் கடந்த 28ஆம் தேதி தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டது.

சென்னை மட்டுமல்லாது கோவை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து முகாம்கள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமாக இருந்தாலும் தட்டுப்பாடு நிலவுவதாக கூறியுள்ளார் அமைச்சர் மா. சுப்ரமணியம்.

நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் மலைப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்களும் தடுப்பூசி போட தயாராக உள்ள நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருவது வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியம்.

தமிழகத்திற்கு இதுவரை வந்த 1.44 கோடி தடுப்பூசி டோஸ்களில் 1.41 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது 2 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு கூறினார் அமைச்சர் மா.சுப்ரமணியம்.

கடந்த 28ஆம் தேதி தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்றைய தினம் ஜூன் 30ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடைப்பெறாது எனவும், தடுப்பூசி வந்த பின் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+