கடும் தட்டுப்பாடு... சென்னையில் தடுப்பூசி முகாம்கள் மீண்டும் நிறுத்தம் - மாநகராட்சி அறிவிப்பு
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று ஜூன் 30ஆம் தேதி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை: கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று ஜூன் 30ஆம் தேதி தடுப்பூசி முகாம்கள் நடைப்பெறாது எனவும், தடுப்பூசி வந்த பின் மாநகராட்சிக்கு உட்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2 மாதமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி தனி கவனம் செலுத்தி வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஜூன் 28 ஆம் தேதி வரையிலும் 25,35,154 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் கடந்த 28ஆம் தேதி தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டது.
சென்னை மட்டுமல்லாது கோவை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து முகாம்கள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமாக இருந்தாலும் தட்டுப்பாடு நிலவுவதாக கூறியுள்ளார் அமைச்சர் மா. சுப்ரமணியம்.
நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் மலைப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்களும் தடுப்பூசி போட தயாராக உள்ள நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருவது வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியம்.
தமிழகத்திற்கு இதுவரை வந்த 1.44 கோடி தடுப்பூசி டோஸ்களில் 1.41 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது 2 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு கூறினார் அமைச்சர் மா.சுப்ரமணியம்.
கடந்த 28ஆம் தேதி தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்றைய தினம் ஜூன் 30ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடைப்பெறாது எனவும், தடுப்பூசி வந்த பின் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications