கடும் தட்டுப்பாடு... சென்னையில் தடுப்பூசி முகாம்கள் மீண்டும் நிறுத்தம் - மாநகராட்சி அறிவிப்பு
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று ஜூன் 30ஆம் தேதி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை: கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று ஜூன் 30ஆம் தேதி தடுப்பூசி முகாம்கள் நடைப்பெறாது எனவும், தடுப்பூசி வந்த பின் மாநகராட்சிக்கு உட்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2 மாதமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி தனி கவனம் செலுத்தி வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஜூன் 28 ஆம் தேதி வரையிலும் 25,35,154 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் கடந்த 28ஆம் தேதி தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டது.
சென்னை மட்டுமல்லாது கோவை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து முகாம்கள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமாக இருந்தாலும் தட்டுப்பாடு நிலவுவதாக கூறியுள்ளார் அமைச்சர் மா. சுப்ரமணியம்.
நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் மலைப்பகுதி கிராமங்களில் வசிக்கும் மக்களும் தடுப்பூசி போட தயாராக உள்ள நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருவது வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியம்.
தமிழகத்திற்கு இதுவரை வந்த 1.44 கோடி தடுப்பூசி டோஸ்களில் 1.41 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது 2 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு கூறினார் அமைச்சர் மா.சுப்ரமணியம்.
கடந்த 28ஆம் தேதி தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்றைய தினம் ஜூன் 30ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடைப்பெறாது எனவும், தடுப்பூசி வந்த பின் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications