இதையும் போட்டுடாதீங்க.. பேசிக்கொண்டு இருக்கும் போதே இருமிய விஜயபாஸ்கர்.. பேட்டியில் நடந்த சம்பவம்!
செய்தியாளர் சந்திப்பின் போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் என்று இருமியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
சென்னை: செய்தியாளர் சந்திப்பின் போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் என்று இருமியது பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
Recommended Video
இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் மொத்தம் 194 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் 4 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் இந்த வைரஸால் 2 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் ஏற்கனவே குணப்படுத்தப்பட்டுவிட்டார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து அப்டேட் அளித்து வருகிறார்.

என்ன பேட்டி
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், கைகளை கிருமிநாசினிகள் கொண்டுதான் கழுவ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சுகாதார பணியாளர்கள், மருத்துவமனை சார்ந்த பணிகளை செய்யும் நபர்கள் இப்படி செய்தால் போதும். மற்றவர்கள் சோப்பு போட்டு சுத்தமாக அடிக்கடி கை கழுவினால் போதும். இந்த வைரஸ் குறித்து மக்கள் பயப்பட கூடாது. கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 2% மட்டுமே இறப்புக்கு வாய்ப்பு. அதனால் பயப்பட வேண்டாம்.

இருமல்
இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும். எல்லா காய்ச்சலும் கொரோனா காய்ச்சல் இல்லை; சளி , இருமல் வந்தாலே அது கொரோனா பாதிப்பு இல்லை; தேவையற்ற பயம் தேவையில்லை. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்கள் தொடர்பு கொண்ட எல்லோரையும் கண்காணித்து வருகிறோம்.

உடனே
வெளிநாட்டில் இருந்து வரும் நபர்களை உடனே கண்காணித்து வருகிறோம். இதில் அறிகுறி உள்ள நபர்களை உடனே ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம். அறிகுறி இல்லாதவர்கள் வீட்டில் போய் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறோம். எல்லாம் சரியாக நடக்கிறது. அதனால்தான் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரிய அளவில் பரவவில்லை என்று விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.

வைரல்
விஜயபாஸ்கர் பேசிக்கொண்டு இருக்கும் போதே, திடீர் என்று ஒரு இடத்தில் இருமினார். இதனால் அங்கிருந்த செய்தியாளர்கள் எல்லோரும் ஒரு நிமிடம் திகைத்து போனார்கள். உடனே விஜயபாஸ்கர் சுதாரித்துக் கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை பார்த்து சிரித்துக் கொண்டே, இதையும் எழுதி விடாதீர்கள். இதையும் செய்தியாக போட்டு விடாதீர்கள் என்று மிகவும் கூலாக குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications